Friday, June 20, 2008

Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌

 
Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌

(கர்பலா போர் - ஜாகிர் நாயக் - முஸ்லீம்களின் கண்டனம்)

முன்னுரை: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசுகிறார் என்றால், இஸ்லாமியர்களுக்கு அதிக மகிழ்ச்சி. ஆனால், அவரது சில வார்த்தைகள் முஸ்லீம்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற யாஜித்(Yazid) என்ற ஒருவரை ஜாகிர் நாயக் புகழ்ந்து பேசியதாகவும் மற்றும் கர்பலா என்ற போரானது "ஒரு அரசியல் போர்" என்று ஜாகிர் நாயக் சொன்னதாகவும் கூறப்படுகிறது. (யாஜித்(Yazid) முகமதுவின் பேரனோடு சேர்த்து 72 முஸ்லீம்களை கொன்றதாக கூறப்படுகிறது)

பொதுவாக முகமதுவின் நெருங்கிய தோழர்களின் பெயரை பயன்படுத்தும் போது "அவர் மீது அல்லா அருள் புரிவானாக" எனபது போல பொருள் வரும் "Radiallah tala anho" (May Allah be pleased with him) என்ற வார்த்தைகளை இஸ்லாமியர்கள் பயன்படுத்துவார்கள். இந்த வார்த்தையை ஜாகிர் நாயக் அவர்கள் கர்பலா போரில் முகமதுவின் பேரனை கொன்ற "யாஜித்" என்பவருக்கு சொன்னார்.

இது மட்டுமல்ல, தன் வார்த்தைகளை ஜாகிர் நாயக் அவர்கள் திரும்ப பெறாமல், தன் வாதத்தை நியாயப்படுத்த ஒரு பத்வா(இஸ்லாமிய சட்டத்தை) உதாரணம் காட்டியதாக சொல்லப்படுகிறது.

1. அரப்நியூஸ் செய்தித்தாள் கீழ் கண்டவாறு கூறுகிறது:

(Zakir Naik's Remarks on Yazid Spark Anger Among Muslims Shahid Raza Burney, Arab News )


மும்பையில் நடந்த 10 நாள் அமைதி முகாமில், நாயக் அவர்கள் யஜித் என்பவரின் பெயரை கூறியபோது, அதோடு கூட "ரதிஅல்லா தால அன்ஹூ" என்று கூறினார் மற்றும் கர்பலா என்ற போர் ஒரு "அரசியல் போர்" என்று கூறினார். இந்த அவரது கருத்தை பல இந்திய முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தார்கள். ஷியா மற்றும் சுன்னி அறிஞர்கள் நாயக் அவர்கள் இதற்கு மன்னிப்பு கோரவில்லையானால், தன் கருத்தை திரும்ப பெறவில்லையானால் இதனால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கண்டனம் தெரிவித்தனர்.



ஷியா கோஜா ஜமாத்தின் தலைவர் சப்தார் கர்மாலி கூறும் போது:

"இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை அரசியல் ஆதாயத்திற்காக செய்தார் என்றுச் சொல்லி, கீழ்தரமாக பேசிவிட்டார். டாக்டர் நாயக்கின் இந்த கூற்று முஸ்லீம்களின் மனதை புண்படுத்திவிட்டது மற்றும் இது ஷியா சுன்னி பிரச்சனையாக மாறவாய்ப்புள்ளது" என்று கூறினார்.

உலேமா கவுன்சிலின் மௌலானா மஹ்மத் தர்யபடி கூறும் போது:

"முஸ்லிம்களின் ஒரு பகுதியினரின் மனதை புண்படுத்தியதற்காக அவர் வருத்தம் தெரிவித்தாலும், அவர் தன் விமர்சனத்தை திரும்ப பெறவில்லை, அதற்கு பதிலாக, தான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க ஒரு பத்வாவை ஆதாரமாக காட்டியுள்ளார். அதாவது டாக்டர் நாயக் தன் விமர்சனத்தை வேண்டுமென்றே சொல்லியுள்ளார் என்று தெரிகிறது" என்றார்.

"இந்த நேரங்களில் நாம் அமைதி காக்க வேண்டும், முஹரம் சமயத்தில் நாம் இமாம் ஹுசைன் அவர்களின் தியாக மரணத்தை நியாபகப்படுத்தி மனதில் நிருத்தவேண்டுமே ஒழிய, டாக்டர் ஜாகிர் நாயக் செய்த தவறுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம்" என்று அல்தாஃப் ஷைக் என்ற ஒரு கணிப் பொறியாளர் கூறினார்.

தேசிய‌ முஸ்லீம் பிரண்ட்(National Muslim Front) இயக்கத்தின் தலைவர் அஜிம் அலம்தார் கூறினார்:

"நாயக் இப்படி மன்னிக்க முடியாத விமர்சனத்தைச் செய்து, தன் காலை தன் வாயில் வைத்துக்கொண்டார். டாக்டர் நாயக் அவர்களின் பிரச்சனை என்னவென்றால், அவருக்கு ஈகோ(தற்பெருமை) பிரச்சனை உள்ளது, இஸ்லாமிய பிரச்சனைகளை குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டென்று அவர் எண்ணுகின்றார், இதனால் சில நேரங்களில் பிரச்சனை மிகவும் பெரியதாக மாறிவிடுகிறது" என்றார்.

Source: Arab News . Com

2. THE TIMES OF INDIA : (Row Over Islamic Preachers Remarks)

ஹஜ் முடித்து திரும்பி வந்த நாயக் தன் சகோதரர் முகம்மத் நாயக் மூலமாக சொன்ன விவரம்: "அந்த அமைதி முகாமில் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது, நான் யாஜித் ஐ கடிந்துக்கொள்ளவும் இல்லை, புகழவும் இல்லை. நான் அவர் மீது அல்லா கிருபை புரிவானாக என்று தான் சொன்னேன். மட்டுமல்ல, நான் சொன்னது சரியானது என்பதை நிருபிக்க தருல் உலோம் டியாபண்ட் பத்வாவும் உள்ளது என்றார்.

Naik, who returned from Haj on Wednesday, conveyed his reaction through his brother Mohammed Naik: "At the peace conference, while replying to a question, I neither condemned nor lauded Yazid. I did say 'May Allah be pleased with him' while mentioning Yazid. I can show the fatwas from seminaries like Darul Uloom Deoband supporting my stand."

Source : THE TIMES OF INDIA - Row over Islamic Preachers Remarks

3. இந்திய முஸ்லீம்கள் தளம் கட்டுரை கூறுகிறது: Mind Your Words Mr. Zakir Naik

பத்வாவை பற்றி அவர் சொன்னது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜாகிர் நாயக் அவர்கள் புகழ்பெற்ற நல்ல இஸ்லாமிய அறிஞர் என்று நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பேன். இந்த பத்வாக்கள் என்னத்துக்கு பிரயோஜனபப்டும், குர்‍ஆன் தெளிவாக கீழ் கண்டவாறு சொல்லும் போது:

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்;. இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (குர்‍ஆன் 4:93)

மற்றும் திரு நாயக் அவர்களுக்கு குர்‍ஆன் எல்லாம் மனப்பாடம் என்று நினைக்கிறேன்,

Source: Indian Muslims . In - Mind Your Words Mr. Zakir Naik

4. Islamic Insights.com : Zakir Naik Draws Ire With Karbala Comments

பெரும்பான்மையான சுன்னி அறிஞர்கள் மற்றும் சட்ட நிபுனர்களாகிய இபின் கதிர், இபின் தைமியா மற்றும் அஹமத் பின் ஹன்பல் போன்றவர்கள் யாஜித்தை கண்டித்துள்ளார்கள் மற்றும் யாஜிதை சபிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Most Sunni scholars and jurists, including Ibn Kathir, Ibn Taymiyya, and Ahmad bin Hanbal, have condemned Yazid and deemed it permissible to curse him.

Source: Islamic Insights . Com - Zakir Naik Draws Ire with Karbala Comments

5. ஜாகிர் நாயக்கிற்கு இந்திய முஸ்லீம்கள் கண்டனம்: (Press Conference to condemn Dr. Zakir Naik)

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Press Conference to condenmn Dr. Zakir Naik 01 - YouTube Link Part 1



Press Conference to condenmn Dr. Zakir Naik 02 - You Tube Link Part 2



Press Conference to condemn Dr. Zakir Naik 03 - You Tube Link Part 3



Press Conference to condemn Dr. Zakir Naik 04 - You Tube Link Part 4



Press Conference to condemn Dr. Zakir Naik 05 - You Tube Link Part 5



டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய வீடியோ: (இந்த வீடியோ யூடியூப்லிருந்து நீக்கப்பட்டு விட்டது.)

http://www.youtube.com/watch?v=k8xtVRy3960 (This video has been removed by the user)

டாக்டர் ஜாகிர் நாயக் அளித்த மறுப்பு

REPLY BY DR ZAKIR NAIK ON KARBALA & YAZID (YAZEED)
Dr. Naik's Response

இந்த செய்தி ஏன் கிறிஸ்தவ தளத்தில் பதிக்கப்படுகிறது:

பொதுவாக, குர்‍ஆன் வசனங்கள், ஹதீஸ் வசனங்கள் இல்லாத பொதுவான கட்டுரைகளை அல்லது இஸ்லாமியர்கள் பற்றிய செய்தி கட்டுரைகளை என் தளத்தில்(ஈஸா குர்‍ஆன்) நான் பதிப்பதில்லை. ஆனால், இந்த செய்தியை மட்டும் என் தளத்தில் பதிக்க நான் விரும்புகிறேன், ஏனென்றால்,

1. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் எது சொன்னாலும், என்ன சொன்னாலும் மற்ற மார்க்கம் பற்றி எந்த தவறான கருத்தைச் சொன்னாலும் அதை அப்படியே பரிசோதித்துப் பார்க்காமல் அப்படியே கேட்கும் முஸ்லீம்கள், இப்போது தங்கள் நம்பிக்கைப் பற்றி இவர் சொன்ன விவரங்கள் தவறு என்று சொல்கிறார்கள். என‌வே, திரு ஜாகிர் நாய‌க் அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து பிஜே அவ‌ர்க‌ள் ஆக‌ட்டும், அல்ல‌து வேறு யாராக‌ இருந்தாலும் ச‌ரி என்னோடு சேர்த்து, ஏதாவ‌து விவ‌ர‌ம் சொன்னால், அது ச‌ரியான‌தா என்று கேள்வி கேட்டு ஆதார‌ம் தேடிப் பார்க்க‌வேண்டும், அது தான் ச‌ரியான‌ வ‌ழிமுறை என்பதை இஸ்லாமியர்கள் அறிய வேண்டும்.

2. பெரும்பான்மையாக இபின் கதிர் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆன் வசனங்களுக்கு, ஹதீஸ்களுக்கு சொல்லும் உரையை நான் என் கட்டுரைகளில் பயன்படுத்துகிறேன், அதையெல்லாம் நம் இஸ்லாமியர்கள் தவறு என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், இப்பொது தங்களுக்கு என்று ஒரு பிரச்சனை என்று வரும் போது, இபின் கதிர் போன்ற சுன்னி இஸ்லாமிய அறிஞர்களே, யாஜித்தை கண்டித்துள்ளார்கள், அப்படி இருக்கும் பொது, ஜாகிர் நாயக் எப்படி யாஜித்துக்கு மதிப்பு தரலாம் என்று கேட்கிறார்கள்.

3. ஜாகிர் நாயக் அவர்கள் யாஜித்துக்கு மதிப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், இஸ்லாமை ஜாகிர் நாயக் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்று அவர் மீது குற்றம் சுமத்தப்படும் போது எப்படி அவர் மற்றவர்களின் வேத வசனங்களுக்கு பொருள் தருகிறார், மற்றும் நான் சொல்வது தான் சரியானது நீங்கள் சொல்வது தவறானது என்றுச் சொல்கிறார் என்பது தான் எனக்கு ஆச்சரியத்தை தருகிறது.


முடிவுரை: தன் வினை தன்னைச் சுடும்.

Monday, April 21, 2008

Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி?


Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:

யார் தேசத் துரோகி?

முன்னுரை: இந்திய இஸ்லாமிய அறிஞர்களில் மிகவும் புகழ் பெற்றவர் மருத்துவர் ஜாகிர் நாயக் ஆவார். இவரது சொற்பொழிவு அல்லது கேள்வி பதில் நிகழ்ச்சி என்றால் இஸ்லாமியர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இன்னும் இவர் மாற்று மதச்சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் தரும் நிகழ்ச்சியில் பேசினால், இஸ்லாமியர்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலத்தான். ஆனால், இவர் சொல்லும் எடுத்துக்காட்டுக்கள், புள்ளிவிவரங்கள் உண்மையை திசை திருப்புவதாகவே பெரும்பான்மையாக அமையும்.இதை இஸ்லாமியர்கள் சோதித்து தெரிந்துக் கொள்ளமாட்டார்கள்.

இந்த கட்டுரையில் திரு ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் சொன்ன கருத்துக்களைக் காண்போம். இவர் ஒருவரை தேசத்துரோகி என்கிறார்? அதாவது தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு அந்த நபரை சமமாக்குகிறார்.இவர் யாரை தேசத்துரோகி என்கிறார்? இஸ்லாம் சட்டத்தை எப்படி இவர் மற்ற நாட்டு சட்டத்தோடு சம்மந்தப்படுத்துகிறார்? என்பதை இக்கட்டுரையில் காண்போம். இவ‌ர் அங்கீகரிக்கும் இதே சட்டம் மற்றவர்கள் தங்கள் மதத்திற்கு சட்டமாக்கி பின்பற்ற‌ இவரோ அல்லது இந்திய இஸ்லாமியர்களோ அனுமதி கொடுப்பார்களா? என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

1. இஸ்லாமைவிட்டு வெளியே சென்றால், உனக்கு மரண தண்டனை நிச்சயம்:

திரு ஜாகிர் நாயக் அவர்கள் பேசிய இந்த வார்த்தைகளை இந்த வீடியோவில் ( http://www.youtube.com/watch?v=ZMAZR8YIhxI ) காணலாம்.
 
அவரின் பேச்சை இந்த வீடியோவில் உருதுவில் கேட்கலாம், அதை சுருக்கமாக ஆங்கிலத்தில் வீடியோவின் கீழே கொடுத்துள்ளார்கள், அதை நான் தமிழில் கொடுக்கிறேன்.
நேர்க்காணலில் கேள்வி கேட்பவர்: ஒரு இஸ்லாமிய நாட்டில் வாழும் ஒரு முஸ்லீம், மற்ற மதத்தை தழுவும் போது, ஏன் அவனுக்கு "மரண தண்டனை" கொடுக்கப்படுகிறது?

ஒரு முஸ்லீம், இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மத‌ம் சரியானது என்று நினைக்கும்போது அல்லது ஒரு முஸ்லீம் அல்லாதவர் முதலில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, பிறகு தன் முந்தைய மதத்திற்கே சென்றுவிட்டால், ஏன் இஸ்லாம் இப்படிப்பட்ட நபர்களுக்கு "மரண தண்டனையை" விதிக்கிறது?

Dr. ஜாகிர் நாயக் அவர்கள்: ஒரு முஸ்லீம் வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த புதிய மதத்தை பிரச்சாரம் செய்தால், இது ஒரு "தேசத் துரோகம் (Treason)" என்ற குற்றத்திற்கு சமமாகும். இப்படிப்பட்ட நபருக்கு இஸ்லாமில் "மரண தண்டனை" கொடுக்கப்படும். பல நாடுகளில் "தேசத்துரோக" குற்றத்திற்கு மரண தண்டனை உண்டு. பல நாடுகளில் உள்ள சட்டத்தின்படி ஒரு இராணுவ தளபதி ( Army General) தன் நாட்டு இராணுவ இரகசியங்களை வேறு ஒரு நாட்டிற்கு விற்றுவிட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்கப்படும். இதே மாதிரி, ஒரு முஸ்லீம் இஸ்லாமை விட்டு வெளியேறி வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த மதத்தை பிரச்சாரம் செய்தால், அவனுக்கு இஸ்லாமில் "மரண தண்டனை" கொடுக்கப்படும்.

நேர்க்காணலில் கேள்வி கேட்பவர்: நீங்கள் ஒரு முக்கியமான விவரத்தைச் சொல்லியுள்ளீர்கள், அதாவது, ஒரு தேசத்துரோகம் குற்றத்திற்கு கொடுக்கப்படும் தண்டனைப் போல, தன் மதத்தை மாற்றிக்கொள்பவனுக்கும் இந்த தண்டனை கொடுக்கப்படுகிறது. பெரும்பான்மையான நாடுகளில் "தேசத்துரோகம்" குற்றத்திற்கு "மரண தண்டனை" விதிப்பது போல, இஸ்லாமும் தன் மதத்தை மாற்றிக்கொள்ளும் முஸ்லீமுக்கு மரண தண்டனையை நியாயமாக விதிக்கிறது


Interviewer: Why is there a "Capital Punishment" for a Muslim – living in an Islamic State – who chooses to adopt any other religion?

If a Muslim finds any other religion more appealing or If a Non-Muslim, after accepting Islam, decides to return to his/her previous religion then Why does Islam impose a "Death Penalty" for such a person?

Naik Response: If a Muslim becomes a Non-Muslim and propagates his/her new religion then it is as good as Treason. There is a "Death Penalty" in Islam for such a person. In many countries the punishment for Treason is also Death. If an army General discloses his army's secrets to another country then there is a "Death Penalty" or life imprisonment for such a person according to the laws of the most of the countries. Similarly If a Muslim becomes Non-Muslim and propagates his/her new religion then there is "Death Penalty" for such a person in Islam.

Interviewer: You have explained a very important point that the Death Penalty is more due to Treason than due to Changing the religion. Since in most of the countries the punishment for Treason is Death therefore Islam is also justified in declaring a "Death Penalty" for a Muslim converting to any other religion.

Source : http://www.youtube.com/watch?v=ZMAZR8YIhxI

2. இராணுவ தளபதியின் தேசத்துரோகத்திற்கும், இஸ்லாமை விட்டு வெளியே வருவதற்கும் என்ன சம்மந்தம்?

இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்குச் செல்லும் முஸ்லீமை இஸ்லாம் சட்டப்படி கொல்ல வேண்டும். ஜாகிர் நாயக் அவர்கள் இதை சிறிது மாற்றி , "இப்படி மாறுபவன் அந்த புதிய மதத்தை பிரச்சாரம் செய்தால்" கொல்லப்படுவான் என்றுச் சொல்கிறார். ஆனால், இஸ்லாமை விட்டு வெளியேறினாலே போதும், அவனுக்கு மரண தண்டனை உண்டு என்பதை நாம் அறிவோம். இப்போது பிரச்சனை இதுவல்ல.

ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டு சரியானதா? என்பது தான் கேள்வி

ஜாகிர் நாயக் அவர்கள் சொல்லும் எடுத்துக்காட்டுகளை கேட்டு,முஸ்லீம்கள் புல்லரித்துப்போவார்கள், ஆனால், இவர் கொடுக்கும் எடுத்துக்காட்டு சம்மந்தம் இல்லாமல் இருக்கும். எப்படி என்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா? மேலும் படியுங்கள்.

தேசத் துரோகத்திற்கு விகிபீடியா கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறது: (இதையே ஜாகிர் நாயக் அவர்கள் "இராணுவ தளபதி" என்று சுருக்கமாக சொல்லிவிட்டார்)

In law, treason is the crime that covers some of the more serious acts of disloyalty to one's sovereign or nation. Historically, treason also covered the murder of specific social superiors, such as the murder of a husband by his wife (treason against the king was known as high treason and treason against a lesser superior was petit treason). A person who commits treason is known as a traitor.

Oran's Dictionary of the Law (1983) defines treason as: "...[a]...citizen's actions to help a foreign government overthrow, make war against, or seriously injure the [parent nation]." In many nations, it is also often considered treason to attempt or conspire to overthrow the government, even if no foreign country is aided or involved by such an endeavour.

Source: http://en.wikipedia.org/wiki/Treason

அதாவது தன் சொந்த நாட்டிற்கு நம்பிக்கை துரோகம் புரிதல், அல்லது தன் நாட்டு அரசாங்கம் கவிழும்படி, தோற்கும் படி தன் நாட்டின் இரகசியங்களை மற்ற நாடுகளுக்கு விற்றுவிடுதல், போன்ற குற்றத்திற்கு Treason என்பார்கள். பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு நாட்டிற்கு பெரும் இழப்பை தரும் செயல் ஆகும்(அரசனை கொல்லுதல், இராணுவ இரகசியங்களை விற்றுவிடுதல் போன்றவை).

3. எதை அடிப்படையாகக் கொண்டு ஜாகிர் நாயக் அவர்கள் இதை உதாரணமாகச் சொன்னார்கள்?

ஒரு முஸ்லீமோ அல்லது முஸ்லீமாக மாறி பிறகு தன் பழைய மதத்திற்கு மாறும் நபர் எந்த வகையில், ஒரு தேசத்துரோகம் புரிந்த அளவிற்கு மிகப்பெரிய குற்றவாளியாக மாறுகிறார்?

நான் ஜாகிர் நாயக் அவர்களிடமும், மற்ற முஸ்லீம்களிடமும் கேட்க விரும்பும் கேள்விகள்:

a) ஒரு இராணுவ தளபதி தனக்கு மட்டும் தெரிந்த நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இரகசியங்களை, மற்ற நாட்டிற்கு விற்றால், தன் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதிப்பு வர காரணமாகிறார்.

b) ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்குச் சென்று தன் புதிய மதத்தையோ அல்லது தான் விட்டுவந்த பழைய மதத்தையோ பிரச்சாரம் செய்தால், இந்த செயல் எந்த வகையில் "இஸ்லாமின் பாதுகாப்பிற்கு" பாதிப்பை உண்டாக்குவதாக அமையும்? விவரியுங்கள்?

c) இராணுவ தளபதிக்கு தெரிந்த இரகசியங்கள் என்பது தன் நாட்டு குடிமகன்களுக்கே தெரியாமல் பாதுகாத்து வைக்கும் முக்கியமான தகவல்கள், இப்படி இஸ்லாமில் என்ன இரகசியம் இருக்கப்போகிறது?இப்படி மற்ற மதங்களுக்கு தெரியாமல் பாதுகாக்கும் இரகசியம் என்ன சொல்லுங்கள்?

d) இராணுவ தளபதி என்பவன் நாட்டின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வகிப்பவன் அதற்காகவே அவருக்கு சம்பளம், பதவி, அதிகாரம் அரசியல் சாசனத்தின்படி அளிக்கப்படுகிறது. ஒரு முஸ்லீமுக்கும் இப்படி ஒரு இராணுவ தளபதிக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா? சொல்லுங்கள்.

e) ஒரு இராணுவ தளபதி தன் நாட்டின் ஆயுத கிடங்கு இருக்கும் இடம், தகவல்கள், ஆவணங்கள், போன்ற விவரங்களை மற்ற நாட்டிற்கு விற்பது போல, இஸ்லாம் மதத்தில் அப்படி என்ன இரகசியங்கள் இருக்கின்றன?

f) புதிதாக மாற்று மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுபவனுக்கு என்ன பரம‌ இரகசியங்களை நீங்கள் சொல்லிவிடுகின்றீர்கள்? அதை அவன் வேறு மதத்திற்கு மாறி மற்றவர்களுக்கு சொல்வதினால், இஸ்லாமுக்கு ஆபத்து வந்துவிடும் அளவிற்கு?

4. இஸ்லாமில் இரகசிய பிரமாணம் எடுக்கின்றீர்களா?

பொதுவாக, ஒரு அரசாங்க, அல்லது ஒரு இராணுவ ஊழியம் செய்ய ஒருவன் நியமிக்கும் போது, அவனுக்கு இரகசிய பிரமாணம் அல்லது பதவி பிரமாணம் கொடுப்பார்கள். இராணுவ தளபதி பிரமாணம் எடுக்கும் போது: "நாட்டின் இரகசியங்களை வெளியே சொல்லமாட்டேன், நம்பிக்கையுள்ளவனாக இருப்பேன், அதை மீறினால் சட்டத்தின் படி தண்டனை கொடுக்கலாம்" என்றுச் சொல்லி பிரமாணம் செய்வார்.

இப்படி ஏதாவது ஒரு பிரமாணத்தை இஸ்லாமுக்கு வருபவன் எடுக்கிறானா? அப்படி நான் இந்த மதத்தை விட்டு வேறு மதத்திற்கு செல்லும் போது என்னை கொல்ல நான் அனுமதி கொடுக்கிறேன் என்று சொல்லி தான் முஸ்லீமாக மாறுகிறானா? அவன் சில ஆவணங்களில் இதற்காக கையெழுத்து போடுகிறானா? சொல்லுங்கள்.

5. புகைபிடித்தல், மதுபானம் பற்றிய எச்சரிக்கை வாசகம், போல இஸ்லாமுக்கு உண்டா?

பொதுவாக, அரசாங்கத்திற்கு அதிக வருமானம் வரும் என்ற நோக்கில், சிகரேட், பீடி மற்றும் மதுபானத்திற்கு அரசாங்கம் அனுமதி அளித்து, அதே நேரத்தில், மக்களுக்கு இவைகளினால் உண்டாகும் தீமையை விளக்கும் வண்ணமாக, சில வாசகங்களை பதிக்கும்படி அரசாங்கம் கட்டளையிடுகிறது.

உதாரணத்திற்கு:

சட்ட எச்சரிக்கை: புகை பிடித்தல் உடல் நலத்திற்குகேடு


Statutory Warning : "Cigarette smoking is injurious to health"

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு


போன்ற வரிகளை நாம் காணுவோம்.( இந்த எச்சரிக்கை வார்த்தைகளை படித்து மக்கள் இவைகளை விட்டுவிடுகிறார்கள் என்று நான் சொல்லவரவில்லை, ஆனால், ஒரு தீமை உண்டு என்று தெரிந்தும் அனுமதி அளிக்கும் போது, அதைப்பற்றி எச்சரிப்பு அவசியம் என்பதால் அரசாங்கம் இதை கட்டாயமாக்கியுள்ளது என்று சொல்லவருகிறேன்.)

"உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால், இந்த வாசகங்கள் கட்டாயம்" என்பதை எந்த நிபந்தனையின்றி நாம் ஏற்றுக்கொள்ளும் போது, இஸ்லாமை விட்டு ஒருவன் வெளியேறினால் அவனது உயிரே போகும் என்ற தீமை அல்லது ஆபத்து இருக்கும் போது, ஏன் இஸ்லாமியர்கள் இதை முன்பே இஸ்லாமுக்கு வருபவனுக்குச் சொல்லி எச்சரிப்பதில்லை என்றுக் கேட்கிறேன்.

யாருக்காவது குர்‍ஆனை கொடுக்கும்போது, அல்லது எங்கள் ஜாகிர் நாயக் அவர்கள் கூட்டத்திற்கு வந்து இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள் என்று சொல்லும் போது, நீங்கள் அந்த கிறிஸ்தவனுக்கோ, இந்துவிற்கோ, அல்லது நாத்தீகனுக்கோ "பாரு தம்பி, ஒரு வேளை இஸ்லாமை நீ ஏற்றுக்கொண்டு பிறகு எனக்கு வேண்டாம்" என்று இஸ்லாமை விட்டு வெளியேறினால், உனக்கு மரண தண்டனை நிச்சயம் உண்டு என்பதை தெரிந்துக்கொள், இதை அங்கீகரித்து ஸ்டாம்ப் காகிகத்தில் கையெழுத்து போட்ட பிறகு தான் நீ முஸ்லீமாக மாறனும் என்று சொல்கிறீர்களா?

Statutory Warning: After accepting Islam, becoming Non-Muslim is Injurious to Life.

முதலில் முஸ்லீமாகி பின்பு காபிரானால், மரணம் நிச்சயம்


என்ற வாசகத்தை உங்கள் நண்பர்களுக்கு இஸ்லாம் பற்றி விவரிக்கும் போது சொல்லமுடியுமா? நான் "புகைப்பிடித்தல் மற்றும் மதுபான" எடுத்துக்காட்டு சொன்னேன் என்று என் மீது கோபம் கொள்ளவேண்டாம், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டை விட ஓர் அளவிற்கு பொருத்தமான எடுத்துக்காட்டைத் தான் நான் கொடுத்துள்ளேன்.

6. நல்ல குடும்பம் நாசனமான கதை:

நீங்கள் ஒரு சாதாரண முஸ்லீம், ஒரு கம்பனியில் வேலை செய்கிறீர்கள், உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் (இந்துவோ, கிறிஸ்தவனோ.. சீக்கியனோ, நாத்தீகனோ) உண்டு. அவன் தன் வயது சென்ற‌ பெற்றோர்களோடும், மனைவி பிள்ளைகளோடும் சந்தோஷமாக, வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். இந்த நிகழ்ச்சி நடக்கும்பொது இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் தினமும் ஐந்து வேளை அல்லாவை தொழுதுக்கொள்ளும் நல்ல மனிதர். கம்பனியில் வேலை செய்யும் போது, அடிக்கடி மதம் சம்மந்தப்பட்ட உரையாடலை நீங்களும் உங்கள் நண்பரும் விவாதித்து இருக்கிறீர்கள். உங்கள் ஊரில் ஒரு இஸ்லாமிய கேள்விபதில் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிப்பு வருகிறது, அக்கூட்டத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களோ அல்லது பிஜே அவர்களோ பேசுகிறார்கள். நீங்கள் உங்கள் நண்பரை இக்கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள், உன் கேள்விகளுக்கு சரியான பதிலை இக்கூட்டத்தில் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள் என்றுச் சொல்கிறீர்கள், அவரும் உங்களோடு கூட்டத்திற்குச் செல்கிறார்.

கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதில்களையும் பார்த்து இந்த மாற்று மத நண்பர் ஆச்சரியப்பட்டு, இன்னும் இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன் என்கிறார்.

அவருக்கு நீங்கள் சில இஸ்லாமிய புத்தகங்களை தருகிறீர்கள், அவரும் அதை படித்து, நான் முஸ்லீமாக விரும்புகிறேன். அல்லா தான் இறைவன் என்பதை நான் உணர்ந்தேன் என்றுச் சொல்ல, அவருக்கு இன்னும் அதிகமாக இஸ்லாம் பற்றிச் சொல்லி, ஒரு நாள் அவர் முஸ்லீமாக தன்னை ஒரு கூட்டத்தில் அங்கீகரித்து முஸ்லீமாக மாறிவிட்டார்.

நாட்கள் கடந்தன, மாதங்கள் விறைவாக மறைந்தன, சில வருடங்கள் ஓடிவிட்டன. தன் பெற்றோரோ அல்லது மனைவி பிள்ளைகளோ இன்னும் முஸ்லீமாக மாறவில்லை மட்டுமல்ல, இவரது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் அல்லது இன்ன பிற காரணங்களால், இந்த முன்னால் மாற்று மத நண்பர், மறுபடியும் தன் பழைய மதத்திற்கே (இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ, சீக்கியனாகவோ, அல்லது நாத்தீகனாகவோ) மாறுகிறேன் என்றுச் சொல்கிறார், மாறியும் விட்டார். தன்னுடைய பழைய மதத்தில் இப்போது ஆர்வமாக சில மார்க்க வேலையையும் செய்கிறார்.

இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இவனுக்கு முஸ்லீமாக அவகாசம் கொடுக்கப்பட்டது இவர் இல்லை என்று மறுக்க, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏனென்றால், இவன் ஒரு தேசத்துரோகி, அதாவது, ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது போல இவன் ஒரு தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு சமமான குற்றம் செய்தவர் ஆவார்.

7. யார் தேசத்துரோகி?

இப்போது சில கேள்விகள் நம் கண்முன் நிற்கின்றன.

இந்த நபர் மரித்ததால்:

இவர் மனைவி இப்போது "விதவை" கோலத்தில் கண்கலங்கி நிற்கிறாள்?

இவரது பிள்ளைகள் தந்தையில்லா அனாதைகளாய் தெருவில் நிற்கிறார்கள்?

இவரது பெற்றோருக்கு இனி வாழ எந்த வழியும் தெரியாத கஷ்டத்தில் இருக்கிறார்கள்?


இந்த நிலையில் "இதை படிக்கும் முஸ்லீம் சகோதரரே"! நீங்களே சொல்லுங்கள் தேசத்துரோகி யார்?


1. முதலில் முஸ்லீமாக மாறி பிறகு வேண்டாமென்று சொன்ன இந்த மாற்று மத நண்பன் தேசத்துரோகியா? அல்லது

2. இவனுக்கு இஸ்லாமைப்பற்றிச் சொன்ன நீங்கள் தேசத்துரோகியா? அல்லது

3. இஸ்லாமைப் பற்றி கூட்டங்கள் நடத்தி மக்களை இஸ்லாமுக்கு அழைப்பவர்கள் தேசத் துரோகியா?


இந்த கேள்விக்கான பதிலை உங்கள் கையிலேயே விட்டுவிடுகிறேன்.

மதம் என்றால் மனது சம்மந்தப்பட்டது இல்லையா? மனிதன் சில நேரங்களில் தான் எடுத்த முடிவு தவறு என்றுச் சொல்லி தன் முடிவை மாற்றிக்கொள்வதில்லையா? அதாவது, பல ஆண்டுகள்(30 அல்லது 40 வயதுடைய மனிதன்) தன் முன்னோர்களோடு சேர்ந்து பின்பற்றிய மதத்தை விட்டுத்தானே அவன் முஸ்லீமாக அல்லது கிறிஸ்தவனாக மாறுகிறான். பல ஆண்டுகள் தன் மனதில் சரி என்று பட்ட மார்க்கத்தை விட்டு, திடீரென்று வேறு முடிவு எடுத்துத் தானே அவன் வேறு மதத்திற்கு மாறுகிறான். அப்படி இருக்கும் போது, சில ஆண்டுகள் பின்பற்றும் மதத்தை பின்பற்றாமல் இருக்க அவனால் முடியாதா? இது தவறா?

யாருக்குத் தெரியும் ஒருவேளை இந்த மரித்த நபர் உயிரோடு இருந்திருப்பாரானால், மறுபடியும் முஸ்லீமாக மாறி, இஸ்லாமை பரப்பி ஒரு சிறந்த இஸ்லாமியனாக கூட மாறி எல்லாரும் ஆச்சரியம் அடையும் அளவிற்கு மாறி இஸ்லாமுக்கு ஒரு நல்ல தூணாகவும் மாற்றப்பட்டு இருக்கலாம்? இதற்கு வாய்ப்பு இல்லை என்று உங்களால் சொல்லமுடியுமா?

8. சரி, மாற்று மதத்திலிருந்து முஸ்லீமாக மாறுபவன் "தேசத்துரோகி" இல்லையா?

இஸ்லாம் சொல்லும் தண்டனை சரியானது தான், இதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களே! ஒரு வேளை இந்துவிலிருந்து முஸ்லீமாக மாறுபவனை "தேசத்துரோகி" என்றுச் சொல்லி, அவனுக்கு இஸ்லாமிய சட்டம் எப்படி சொல்கிறதோ அதே போல மரண தண்ட்னை அளித்தால்?

ஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறினால் இது தேசத்துரோகம் குற்றத்திற்கு சமம் என்றுச் சொல்லி, அவனை கொல்லும் சட்டத்தை அமுல் படுத்தினால் எப்படி இருக்கும்?

இஸ்லாமிய நாடுகளில், இஸ்லாமிய சட்டம் போலவே, யாரும் தங்கள் மத‌த்திலிருந்து இஸ்லாமுக்கு மாறக்கூடாது, அது தன் தாய் நாட்டிற்கு துரோகம் செய்த குற்றத்திற்கு சம‌ம் என்றுச் சொல்லி, முஸ்லீமாக மாறுபவனுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை அமுல் படுத்த உங்களுக்கு, ஜாகிர் நாயக் அவர்களுக்கு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு சம்மதமா? நீங்கள் உண்மையாளர்களாக நேர்மையாளர்களாக இருப்பீர்களானால், இதை ஏற்றுக்கொள்வீர்கள்.

இஸ்லாமுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி! இது சரியா?

9. இஸ்லாமை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நண்பா! இனி எப்படி அறிமுகப்படுத்தப்போகிறீர்கள்?

இனி இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றி மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யும் போது, சிகரேட் பாக்கெட்டில் இருப்பது போலவும், மதுபான கடையின் பெயர் பலகையில் எழுதியிருப்பது போலவும், இஸ்லாமை விட்டு வெளியேறினால் ஏற்படும் தீமையையும் சொல்ல விருப்பமா? ஒரு கிறிஸ்தவனுக்கோ, இந்துவிற்கோ இஸ்லாமைப் பற்றி சொல்லும்பொது, அவன் மனைவியின் முகம் உங்களுக்கு முன்பாக வருவதாக, அவன் பிள்ளைகளின் பிஞ்சு முகங்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக வருதாக.

இந்தியாவில் இப்படிப்பட்ட தண்டனைகள் இல்லை, இஸ்லாம் இப்படி எல்லாம் செய்ய சொல்வதில்லை என்று சொல்லவேண்டாம், இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறும் மனிதர்களின் நிலை என்ன என்பதை மக்கள் மிகவும் நன்றாகவே தெரிந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

10. இரட்டை தண்டனை எதற்கு:

இஸ்லாமை விட்டு வெளியேறுபவனுக்கு இரட்டை தண்டனை எதற்கு?

முதல் தண்டனை: ஷரியா சட்டம் மூலமாக அவனுக்கு மரண தண்டனை

இரண்டாம் தண்டனை: இஸ்லாமை அவன் விட்டுச்சென்றதால், அல்லா அவனை நரக நெருப்பினால் தண்டிப்பார்

இஸ்லாமை விட்டு வெளியேறினவனுக்கு இந்த உலகத்தில் மரண தண்டனை கொடுத்துவிட்டால், பின் ஏன் அவனுக்கு நரக நெருப்பினாலும் அல்லா இரண்டாம் முறையும் தண்டிக்கவேண்டும். ஏன் இரட்டை தண்டனை?

அல்லது இந்த உலகத்தில் மரண தண்டனையை அவன் பெற்றுவிட்டதால், அல்லா அவனுக்கு சொர்க்கத்தில் அனுமதி அளித்துவிடுவாரோ?

இது உண்மையானால், இஸ்லாமை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளாதவனின் நிலையே மிகவும் நல்லது. ஏனென்றால், அவன் இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ இருப்பதினால், இந்த உலகத்திலாவது தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு மரிப்பான். இஸ்லாம் உண்மையான மார்க்கமாக இருந்தால் தானே இவன் அல்லாவினால் தண்டிக்கப்படப்போகிறான்.

11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி?

பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.

ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் ஜாகிர் நாயக் அவர்கள் செய்துள்ளார்கள்.

ஜாகிர் நாயக் அவர்களுக்கு சில கேள்விகள்:

1. இஸ்லாமின் மரண தண்டனை சட்டத்தோடு, மற்ற நாடுகளின் சட்டத்தை ஒப்பிட்டு உதாரணம் காட்டும் ஜாகிர் நாயக் அவர்களே, இதே போல மற்ற நாடுகளின் சட்டத்தை வேறு சில இஸ்லாமிய சட்டத்தோடு ஒப்பிட நீங்கள் தயாரா?

2. அதாவது, இதர காபிர் (இந்தியா போன்ற) நாடுகளில் "திருட்டிற்கோ, விவாகரத்திற்கோ, இன்னபிற குற்றங்களுக்கு உள்ள தண்டனைகளை, இஸ்லாமிய சட்டத்தில் திருட்டிற்கோ, விவாகரத்திற்கோ, சம்மந்தப்படுத்த" நீங்கள் தயாரா?

3. பெரும்பான்மையான நாடுகளில் திருட்டிற்கு என்ன தண்டனை கொடுக்கிறார்ளோ அதே தண்டனையை நீங்கள் இஸ்லாம் நாடுகளில் அமுல் படுத்த தயாரா?

4. ஒரு மதத்திலிருந்து வெளியேறுபவனின் செயலுக்கு, மிகவும் கொடிய குற்றமாக கருத்தப்படும், நாட்டிற்கே ஆபத்தை விளைவிக்கும் குற்றமாக கருத்தப்படும் தேசத்துரோக குற்றத்தோடு முடி போடுகிறீர்களே, உங்கள் எடுத்துக்காட்டை என்னவென்றுச் சொல்ல? ஒரு இராணுவ தளபதி நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இரகசியத்தை வெளிநாட்டிற்கு விற்றுவிட்டால், தன் நாடு அழியும் அபாயம் உள்ளது. இந்த ஒரு மனிதனின் செயலால், நாடே அழிந்துவிடும். ஆனால், ஒரு மனிதன் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டால், இஸ்லாம் அழியுமா? சிந்தியுங்கள்.

5. அல்லாவின் சட்டத்தில் உள்ள மரண தண்டனையை நியாயப்படுத்த மற்ற நாடுகளின் (காபிர் நாடுகளின்) சட்டத்தில் என்ன குற்றத்திற்கு மரண தண்டனை உள்ளதோ அதை சம்மந்தப்படுத்தி சொல்லிவிடுகிறீர்கள்? இது போல, மற்ற நாடுகளின் எல்லா சட்டங்களோடு இஸ்லாமிய சட்டத்தை சம்மந்தப்படுத்தி நியாயப்படுத்த நீங்கள் தயாரா?

முடிவுரை: அருமையான மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களே, மாற்று மதத்திலிருந்து இஸ்லாமியர்களாக மாறியவ‌ர்களுக்கு உங்கள் கண்களுக்கு முன்பாக மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை உங்களால் சகித்துக்கொள்ளமுடியுமா? ஏனென்றால், அவன் தன் மதத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்து தானே முஸ்லீமாக மாறினான்?

இனி யாராவது முஸ்லீமாக மாறினால், ஜாகிர் நாயக் அவர்களே! நீங்கள் ஒரு ஸ்டாம்ப் காகிதத்தில்(Stamp Paper):

"ஜான் ஜோசப் என்பவரின் மகனாகிய‌ மத்தேயு என்னும் பெயர் கொண்ட‌ நான் இன்று இஸ்லாமை ஏற்றுக்கொள்கிறேன், பின்பு ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேறினால், என் பழைய மதத்தை பரப்ப உதவி செய்தால், என் மனைவி விதவையாகும்படியாக‌, என் பிள்ளைகள் அனாதைகள் ஆகும் படியாக என் பெற்றோருக்கு உதவி செய்வார் யாரும் இல்லாமல் போகும் படியாக, எல்லாரையும் அம்போ என்று விட்டு விட்டு, என் இந்த நம்பிக்கைத்துரோக குற்றத்திற்காக முதல் தண்டனையாக‌ நான் மரண தண்டனையை இஸ்லாமிய சட்டம் படி ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், அதே நேரத்தில் இதே குற்றத்திற்காக இரண்டாம் தண்டனையாக‌ அல்லா என்னை நரக நெருப்பில் வாதிக்கவும் எனக்கு சம்மதமே"

இப்படிக்கு,

முஸ்லீமாக மாறிய முனியாண்டி (அல்லது) முஸ்லீமாக மாறிய மத்தேயு

சாட்சி 1:

சாட்சி 2:


என்று எழுதி கையெழுத்து பெற்றுக்கொண்டு இஸ்லாமில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் செய்வீர்களானால், இனி யாராவது "ஏன் இஸ்லாம் அவரை கொன்றது?" என்று கேள்வி கேட்டால், அந்த நபர் கையெழுத்து போட்ட காகிகத்தை காட்டலாம், உங்களுக்கு இஸ்லாமின் சட்டத்தின் தண்டனையை நியாயப்படுத்த‌ காபிர்களின் சட்டத்தில் உள்ள தண்டனையை எடுத்துக்காட்டாக காட்டவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈஸா குர்‍ஆனின் இதர பதில்கள்:

1. டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:)

2. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது


 

Friday, April 11, 2008

ஏகத்துவத்திற்கு பதில்: கிறிஸ்தவர்கள் விஷம் அருந்த தயாரா? விஷம் சாப்பிட்ட நபி மரித்தும்போனார்.

The Challenge of Mark 16

மாற்கு 16ன் சவால்

Sam Shamoun


அஹமத் தீதத் மற்றும் ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், கிறிஸ்தவத்திற்கு எதிராக வாதம் புரியும் போது, பொதுவாக அவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி என்னவென்றால், மாற்கு 16ம் அதிகாரம் வசனங்கள் 14 லிருந்து 18 வரை குறிப்பிட்டு கிறிஸ்தவர்களுக்கு சவால் விடுவார்கள். முக்கியமாக, இயேசு தன்னை நம்புகிறவர்களுக்கு உறுதி அளிக்கும் வண்ணமாக, "தன்னை நம்புகிறவர்களுக்கு எந்த சேதமும் வராது, அதாவது விஷத்தை குடித்தாலும் உங்களை அது ஒன்றும் செய்யாது" என்றுச் சொன்ன வசனங்களை இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கோள் காட்டுவார்கள்.

அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:14-18)

இந்த சவாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஒரு கிறிஸ்தவன் சொன்னால், உடனே, இந்த கிறிஸ்தவருக்கு இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிவிடுவார்கள்.

இயேசு இந்த வசனங்களில் சொன்ன அர்த்தத்தை மாற்றி இஸ்லாமியர்கள் வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். அதாவது, ஒரு வேத வசனத்திற்கு சரியான பொருள் கூறவேண்டுமானால், மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் அதற்கு பொருள் கூறவேண்டும். இதை நாம் செய்தோமானால், இயேசு சொன்ன வசனங்களுக்கு உண்மையான பொருளை நாம் கண்டுக்கொள்ள முடியும்:

அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். (லூக்கா 4:19-12)

இந்த வசனங்களில், இயேசு தன்னை பின்பற்றுகிறவர்களை அழைத்து, நீங்கள் போய் எங்கெல்லாம் பாம்புகள் இருக்கின்றனவோ அவைகளை உங்கள் கைகளால் எடுங்கள், மற்றும் விஷமிருந்தால் அதையும் குடியுங்கள் என்றுச் சொல்லவில்லை. இந்த இடத்தில் இயேசு சொன்ன செய்தி, "எதிரியானவன் எந்த வழிமுறைகளில் விசுவாசிகளின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நினைத்து செயல்பட்டாலும், அது ஒரு பொருட்டல்ல, அவன் வெற்றி பெறவே முடியாது" என்பதாகும் (Christ's point was that no matter what the enemy tries to do in thwarting the efforts of the believers, he will never succeed.) இது முழுக்க முழுக்க இயேசு அளித்த உறுதியாகும், மற்றும் அவருடைய சித்தம் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவதற்கு, அவர் கொடுத்த இந்த அதிகாரம் எல்லா விசுவாசிகள் மீதும் உள்ளது.(This is based solely on the promises of Christ that his authority rests upon all true believers to accomplish his will in our lives: )

பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். (லூக்கா 10:17-20)

அதே போல, பரிசுத்த வேதாகமம், இயேசு மாற்கு 16ம் அதிகாரத்தில் சொன்ன உறுதிமொழி எப்படி உண்மையான விசுவாசிகளின் வாழ்க்கையில் நிறைவேறியது என்றும் சாட்சி பகருகிறது:

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:1-12)
அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலோமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 5:12-16)
பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. (அப்போஸ்தலர் 19:11-17)
பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள். தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான். புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 28:3-9)

இதுமட்டுமல்லாமல், விஷம் பற்றியும், சேதமடையாமல் இருப்பது பற்றியும் ஒரு ஆவிக்குரிய பொருள் கூட உள்ளது. "பொல்லாத மனுஷனுடைய நாக்கு விஷமுள்ள பாம்பு போல உள்ளது என்றும், இப்படிப்பட்டவன் தன்னுடைய பொய்யினாலும், ஏமாற்று வார்த்தைகளினாலும், நல்ல விசுவாசிகளை அழிக்க முயற்சி செய்கிறான்" என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது:

கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். (சங்கீதம் 140:1-4)

அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; (ரோமர் 3:13)

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம்நிறைந்ததுமாயிருக்கிறது. (யாக்கோபு 3:8)

இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார்

கடைசியாக, இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார். அதாவது, யாரோ செய்த செய்வினை என்றுச் சொல்லக்கூடிய பில்லிசூன்யத்தால் முகமது பீடிக்கப்பட்டதுமல்லாமல், அவர் சாப்பிட்ட ஒரு விஷத்தால் மரித்தும் போனார்!


பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3175

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.
(அல்-புகாரி)


பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3268

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்hயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்?' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்?' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது" என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்" என்று பதிலளித்தார்கள்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன" என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்" என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.
(அல்-புகாரி)


பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5763

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு 'பன}ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் 'ஒரு நாள்' அல்லது 'ஓரிரவு' என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.

பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன?' என்று கேட்டார். அத்தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்ல, முதலாமவர் 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?' என்று கேட்டார். தோழர், 'லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)' என்று பதிலளித்தார். அவர், 'எதில் வைத்திருக்கிறான்?' என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே இருக்கிறது?' என்று கேட்க, மற்றவர், '(பன} ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்' என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, 'ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன' என்று கூறினார்கள்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)' என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. (அல்-புகாரி)


பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6391

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), '(ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அது என்ன? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்.

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும் மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டதற்கு அவரின் தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளிக்க முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தது யார்?' என்று வினவியதற்கு 'லபீத் இப்னு அஃஸம்' என்று தோழர் பதிலளித்தார். 'அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, 'சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே உள்ளது?' என்று கேட்க, மற்றவர், 'தர்வானில் உள்ளது' என்றார். 'தர்வான்' என்பது பன}ஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.

பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு)விட்டு என்னிடம் வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன' என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை வெளியே எடுக்கவில்லை)' என்றார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)' என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. (அல்-புகாரி)



விஷம் தோய்க்கப்பட்ட உணவை சிறிது உண்ட முகமது



பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617

அனஸ்(ரலி) அறிவித்தார்.

யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (அல்-புகாரி)

இபின் சௌத் தொகுத்த சரிதை " the Kitab al-Tabaqat al-Kabir (Book of the Major Classes), Volume 2, p. 249:" லிருந்து

ஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்ட‌ ஒரு பெண் ஆட்டின் தொடையை நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவர் எடுத்துக்கொண்டார், தன் வாயில் போட்டுக்கொண்டார், அதை மென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்கு இவ்விதமாகச் சொன்னார்: "நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத்தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது". பின்பு, அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லா அதை உங்களுக்கு தெரிவிப்பார், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்"

மற்றும்

அல்லாவின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்து சாப்பிட்டார்கள். அந்த ஆடு : "நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்" என்று சொல்லியது. அவர்(முஹம்மத்) தன் தோழர்களிடம் "உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது!" என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா(but Bishr Ibn al-Bara expired) என்பவர் மரித்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். . அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்". அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள்.

அல்-ட‌பரியின் சரித்திர தொகுப்பிலிருந்து (From al-Tabari's History, Volume 8, p. 124: )

அல்லாவின் தூதர் வியாதிப்பட்டு அதனால் மரித்துப்போனார், அப்படி வியாதிப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: "பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்".

இதுவரை நாம் கண்ட விவரங்களின் வெளிச்சத்தில், நாம் கீழ்கண்ட‌ முடிவுக்குத் தான் வரமுடியும்.

தன்னுடைய தீர்க்கதரிசியை பில்லிசூன்யத்திலிருந்தும் மற்றும் விஷத்திலிருந்தும் காப்பாற்ற அல்லாவிற்கு சக்தியில்லாமல் இருந்தது, இதனால், இயேசு அல்லாவைவிட அதிக சக்தியுள்ளவர் என்றும், மற்றும் அல்லாவை விட உயர்ந்தவர் என்றும் நாம் முடிவு செய்யலாம். அல்லது முகமது இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி(நபி) அல்ல என்பதை முடிவு செய்யலாம்.

இதில் எது சரி என்பதை இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களே முடிவு செய்யட்டும்.

மூலகட்டுரை:
http://www.answering-islam.org/Responses/Naik/mk16challenge.htm


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு:

1.
டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:)

2.
ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது

3. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஆன்சரிங் இஸ்லாம் தள மறுப்புக் கட்டுரைகள்(ஆங்கிலம்)

மேலும் படிப்பதற்கு:


4. Examining A Muslim's Defense of Muhammad's Bewitchment : Part 1

5.
Examining A Muslim's Defense of Muhammad's Bewitchment : Part 2

6.
More on Muhammad and Poison:(Examining Abdullah Smith's War on Islam As Well as His Continuous Intellectual Suicide Mission)