Tuesday, April 14, 2009

ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில் - பல தார மணம் (Polygamy)

ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்கள்

 
இஸ்லாமியரல்லாதவர்கள் கேட்கும் பொதுவாக கேள்விகளுக்கு பதில்கள்
 
 
பல தார மணம் (Polygamy)


இக்கட்டுரையில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் வரிகள் பச்சை வண்ணத்தில் தரப்படுகிறது.
 
கேள்வி: ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது? அல்லது பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது?

பதில்:

1. பலதார மணம் என்றால் என்ன?

பலதார மணம் என்ற திருமண அமைப்பில் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ளலாம். பல தார மணம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது Polygyny என்பதாகும் இதில் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யலாம். இரண்டாவது Polyandry என்பதாகும், இம்முறைப்படி ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யலாம். இஸ்லாமில் முதலாம் வகையான polygyny ஒரு வரையறையோடு அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் இரண்டாம் வகையான polyandry முழுவதுமாக‌ தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது நமது பழைய கேள்விக்கு வருவோம் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள‌ ஏன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது?
 
டாக்டர் ஜாகீர் நாயக்கின் வரையறையை (விளக்கத்தை) நான் ஏற்றுக்கொள்கிறேன்.
 
2. உலகத்தில் உள்ள மதம் சார்ந்த மத நூல்களிலேயே திருக் குரானில் தான் ஒருவரை மட்டும் திருமணம் செய்துக்கொள் என்ற வார்த்தைகள் அல்லது கருத்து உள்ளது. மற்ற மறை நூல்களில் அவ்வாறு ஒரு மனிதனுக்கு ஒருத்தி என்ற கொள்கை இல்லவே இல்லை எனலாம். ஏனைய மறை நூல்களான வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, பரிசுத்த வேதாகமம் ஆகியனவற்றில் ஒரு ஆண் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்ற வரையறை காணப்படவில்லை. அந்நூல்களில் உள்ளபடி ஒரு மனிதன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம்.
 
இது ஒரு பொருந்தாத வாதமாகும். பைபிளுக்கு ஒவ்வாத வாதத்தை ஜாகிர் நாயக் முன்வைத்திருக்கிறார். ஆனால், இவர் சொல்வதற்கு எதிர்மறையாக‌, தேவன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற திட்டத்தைத் தான் உருவாக்கி வைத்து இருந்தார். இதைத்தான் வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் காண்கிறோம்.
 
"இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24)

"அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனை படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியை பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்கு துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியை குறித்து எச்சரிக்கையாடிருங்கள்" (மல்கியா 2:15)
 
இயேசுவும் இவ்விதம் சொல்லியுள்ளார்...

"இப்படி இருக்கிறபடியினால் அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் எனறார். அதற்கு அவர்கள்; அப்படியானால் தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவனை தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். அதற்கு அவர்: உங்கள் மனைவிகளை தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை". (மத்தேயு 19:6-8)
 
பின்னர் தான் கிறிஸ்தவ பாதிரிகளும் இந்து பூசாரிகளும் மனைவிகளின் எண்ணிக்கையை ஒன்று என குறைத்துவிட்டனர்.
 
வேதாகமத்திலேயே தேவனுடைய திட்டம் ஒருவனுக்கு ஒருத்தி என தெளிவாக கூறப்பட்டுள்ள போது, திருச்சபையானது எப்படி ஒரு மனிதனுக்கு ஒரு மனைவி தான் இருக்க வேண்டும் என்பதை வரையறுத்திருக்க முடியும்? இந்து திருமண சடங்குகளை எப்படி இந்த விவாதத்தில் வரமுடியும்? என்று நான் வியப்படைகிறேன். டாக்டர் நாயக் தான் உண்மையானது என கருதும் இஸ்லாமிய பழக்க வழக்கங்களை உறுதிப்படுத்த, தான் தவறானது என கருதும் மற்றொரு மதத்தின் திருமண சடங்குகளை எப்படி இந்த விவாதத்தில் நுழைக்க முடியும்?
 
இந்து மதத்தில் உள்ள பிரபலமான அனேகர் பல மனைவிகளை கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக ராமரின் தந்தையான தசரதன் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரை மணமுடித்து இருந்தார். கிருஷ்ணருக்கும் பல மனைவிகள் இருந்தனர்.
 
டாக்டர் நாயக் தனது மூதாதையரின் மதத்தை பற்றி தவறாக புரிந்துகொண்டிருக்கிறார். ஒரு ஆண் வாரிசை பெறுவதற்காக தசரதன் மூன்று பெண்களை திருமணம் செய்தார். தசரதனுக்கு மகள் இருந்தாள் ஆனால் தனது அரியணையை அலங்கரிக்க ஆண் வாரிசு வேண்டும் என விரும்பினார். கௌசல்யை மகனை பெறாததால் சுமித்திரையை திருமணம் செய்தார், அவரும் ஆண் வாரிசை பெற தவறியதால் கைகேயியை திருமணம் செய்தார். இவ்வாறு இருந்த சூழ் நிலையிலும் இந்து மதத்தில் ஒரு மனிதன் பல பெண்களை திருமணம் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கமாக இருந்ததில்லை. ராமன், லஷ்மணன், பரதன், சத்ருகன் ஆகியோர்கள் ஒரு மனைவியை மாத்திரம் திருமணம் செய்திருந்தனர். கிருஷ்ணரும் பல பெண்கள் அவரை திருமணம் செய்ய விரும்பியதால் அவர்களை திருமணம் செய்தார். இந்து மதத்தில் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் பழக்கத்தையும் திரௌபதியின் வாயிலாக சுட்டிக்காட்டப்படுகிறது.

நான் மறுபடியும் டாக்டர் நாயக்கை வினவுகிறேன், ஏன் தனது மத நம்பிக்கைகளை வலுப்படுத்த இந்து புராணங்களை இழுக்கிறார். இந்து மத பாத்திரங்கள் எங்ஙனம் இஸ்லாமிய முறைமைகளை உறுதிப்படுத்த முடியும். நம்பிக்கையற்றவர்களின் பழக்கவழக்கங்களைக்கொண்டு தனது மதத்தை ஏன் அவர் நியாயப்படுத்த முயல்கிறார்.
 
பண்டைய காலத்தில் கிறிஸ்தவ ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றிருந்தனர், பைபிள் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்று ஒரு வரையறையை கொடுக்கவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் கிறிஸ்தவ திருச்சபை ஒரு மனிதனுக்கு ஒருத்தி என நெறிப்படுத்தியது.
 
இல்லை, பவுல் அப்போஸ்தலன் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கிறிஸ்தவ சபையின் தொடக்க காலத்திலேயே பிரசங்கித்து வந்தார்.
 
"ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்" 1 தீமோத்தேயு 3:2

"மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்" 1 தீமோத்தேயு 3:12

"குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்" தீத்து 1:6

"இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" எபேசியர் 5 :31
 
டாக்டர் நாயக்:

ஒரு மனிதன் பல பெண்களை திருமணம் செய்ய யூத மதத்தில் அனுமதியுள்ளது, தல்மூத் சட்டத்தின் படி ஆபிரகாமுக்கு 2 மனைவிகள் இருந்தனர், சாலொமொனுக்கோ நுற்றுக்கணக்கான மனைவியர் இருந்தனர்.
 
டாக்டர் நாயக் சாலொமோனின் வரலாறை கூறியுள்ளார். சாலொமோனின் வாழ்க்கை வரலாறு நமக்கு போதிக்கும் பாடம், நம் சொந்த விருப்பத்தின் படி நடந்து, தேவனுடைய திட்டத்தின் படி நடக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதின் மிகச்சிறந்த உதாரணமாகும்.
 
அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள், அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள். சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை. (1 இராஜாக்கள் 11:3-4)
 
தனது தெய்வீக திட்டத்திற்கு முரண்பட்ட சமுதாய அமைப்பை தேவன் அங்கீகரிக்கவேண்டுமென்று அவரை கட்டாயப்படுத்தமுடியாது. முகமதுவின் பலதாரமண கொள்கை அமைதியான குடும்ப வாழ்விற்கான அமைப்பாக இருந்ததில்லை. அவரது மனைவிகளுக்கும் மறுமனையாட்டிகளுக்கும் மனக்கசப்புகள், போராட்டங்கள் நிறைந்து காணப்பட்டன. ஒருமுறை தனது வீட்டில் சமாதானத்தை நிறுவச்செய்ய இறைவனிடமிருந்து வெளிப்பாடுகள் அவருக்கு தேவைப்பட்டது. மேலும் விபரங்களுக்கு "தன் பாலியல் காரணங்களுக்காக தான் செய்த சத்தியத்தை உடைத்த நபி - Sex, Oaths, and the Prophet (சூரா 66)" என்ற கட்டுரையை படிக்கவும்.

தேவன் ஆதாமை படைத்து அவனது துணையாக ஏவாளையும் படைத்தார், இதுவே மனுக்குலத்திற்கு தேவன் அமைத்த சரியான குடும்ப முறையாகும். ஒரு மனுஷனும் மனுஷியும் இணையும் திருமணம் என்ற அமைப்பை தேவன் மதித்து அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார். தேவனுடைய இத்திட்டத்தை விட்டு வழிவிலகினால் (அஃதாவது ஒருவன் பல பெண்களை திருமணம் செய்தல், ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்தல், விபச்சாரம், திருமணத்திற்கு முந்தைய தொடர்புகள், ஓரினச்சேர்க்கை.. போன்றவைகளை நாம் செய்தால்) வாழ்க்கையிலும் தேவனின் நியாயத்தீர்ப்பு நாளிலும் எதிர்மறையான விளைகளை நாம் சந்திக்கவேண்டி வரும்.
 
ஒருவன் பல பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் ரபி கெர்சோம் பென் யெகுதா (கிபி 960 முதல் கிபி 1030) (Rabbi Gershom ben Yehudah) எதிர்ப்பு சட்டம் கொண்டு வரும் வரை நீடித்து இருந்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் கிபி 1950 வரை இப்பழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர். இஸ்ரேலில் இருந்த தலைமை மதகுரு ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்வதை தடை செய்யும் வரை இப்பழக்கம் நீடித்தது.
 
ரபி கெர்சோம் பென் யெகுதா தேவனுடைய திட்டத்தை ஏற்றுக்கொண்டார் என்பதையே இது காட்டுகிறது
 
3. இந்துக்களே இஸ்லாமியரை விட பலதார மணம் புரிபவராக இருந்துள்ளனர். 1975ல் வெளியிடப்பட்ட" இஸ்லாமில் பெண்களின் நிலை - Committee of The Status of Woman in Islam" என்ற அறிக்கையில் பக்கங்கள் 66,67 ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, அஃதாவது 1951 முதல் 61 வரை நடைபெற்ற பலதார மணங்களின் படி இந்துக்கள் 5.06 விழுக்காடாகவும் இஸ்லாமியர் 4.31 விழுக்காடாகவும் பலதார மணம் புரிபவராக இருந்துவந்துள்ளனர். அதுவும் இந்தியாவில் இஸ்லாமியர் அல்லாதோர் பலதார மணம் புரிவது சட்டவிரோதம் என இருக்கும் போதே இந்த நிலை. ஒருவேளை இந்து ஆண்களுக்கு பலதார மணம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்துக்களின் பலதாரமண விழுக்காடு எந்த அளவுக்கு அதிகமாக இருந்திருக்கும். 1954 ம் ஆண்டு இந்து திருமண சட்டம் வந்த பின் தான் இந்து ஆண்கள் ஒரு பெண்ணுக்கும் மேல் திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலை வந்தது. இப்போதும் கூட இந்திய சட்டம் தான் இந்துக்களின் பலதார மணத்தை தடை செய்து வைத்துள்ளதேயன்றி இந்து வேதங்கள் அல்ல.
 
மறுபடியுமாக ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை, அது என்னவெனில் டாக்டர் நாயக் அவர்கள் தனது மத பழக்கவழக்கங்களை நியாயப்படுத்த ஏன் தான் போலி சமயமாக கருதும் இந்து மதத்தை குறிப்பிடுகிறார்? ஏன் 19ம் நூற்றாண்டு மோர்மொன்கள், பல்வேறு நாடுகளில் இருந்த மதங்கள் பலதார மணம் என்ற பழக்கத்தை கொண்டிருந்தது தெரியவில்லையா? அவைகள் பற்றி ஏன் அவர் குறிப்பிடவில்லை? டாக்டர் நாயக் அவர்கள் "பொய்யான" மார்க்கம் எனக்கருதும் ஒரு மதத்தின் பழக்கங்கள் எப்படி அவர் "சரியான மார்க்கம்" எனக் கருதும் இஸ்லாம் சரியானது என நிருபிக்க உதவும்? வட இந்தியாவிற்கு எனது வாழ் நாளில் இரண்டு முறை சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன், நான் பார்த்த வரை எந்த ஒரு இந்து மனிதனும் பலதார மணம் புரிந்தவராக இருந்ததில்லை.
 
சரி இப்போது நாம் இஸ்லாமில் ஏன் ஒரு மனிதன் பலதார மணம் புரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி காண்போம்.

4. அளவான பலதார முறையை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இந்த உலகத்தில் உள்ள மறை நூல்களிலேயே இஸ்லாமிய மறை நூலான குர்ஆனில் தான் ஒருவனுக்கு ஒருத்தி என கூறப்பட்டுள்ளது. இதை சூரா நிஸா என்ற அத்தியாயத்தில் காணலாம், "உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)..(குர்ஆன்4:3). குர்ஆன் இறக்கப்படும் முன்னர் வரை ஆண்கள் வகைதொகையற்ற அளவு மணம் புரிபவர்களாக இருந்தனர். ஒருவர் நூற்றுக்கணக்காக கூட திருமணம் செய்து இருந்தனர். இஸ்லாம் மாத்திரமே நான்கு மனைவியர் என்ற அதிகபட்ச அனுமதியளித்துள்ளது. இஸ்லாமில் மாத்திரமே ஒரு மனிதன் அவர்களிடம் நியாயமான முறையில் நடந்துக்கொள்ளும் பட்சத்தில் 2, 3 அல்லது 4 பேரை திருமணம் செய்யலாம் என்ற வரைமுறை உள்ளது. சூரா நிஸாவின் 129 ல் "(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது" (குர்ஆன் 4:129). எனவே பலதார மணம் என்பது சட்டம் அல்ல அது ஒரு விதிவிலக்கு மாத்திரமே. ஒரு இஸ்லாமியர் கண்டிப்பாக 4 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என பலர் தவறாக எண்ணுகின்றனர். இஸ்லாமில் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என 5 காரியங்கள் உண்டு.

1) "ஃபார்ஸ் - Farz" அதாவது கட்டாயமாக செய்யவேண்டியவைகள்
2) "மஸ்தஹப் - Mustahab" அதாவது பரிந்துரைக்கப்பட்டது
3) "மஃபா - Mubah" அதாவது அனுமதியளிக்கப்பட்டது
4) "மாக்ரூஹ் - Makruh" அதாவது பரிந்துரைக்கப்படாதது
5) "ஹராம் - Haram" அதாவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டது

பலதார மணம் இதில் நடுவில் வரும் அனுமதிக்கப்பட்ட பிரிவில் வருபவர். இதை 2, 3 அல்லது 4 மனைவிகள் உள்ள இஸ்லாமியர் ஒரு மனைவி உள்ள இஸ்லாமியரை விட சிறந்தவர் என நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
 
முகமது ஏன் 4 மனைவியருக்கு மேல் வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தார்?
 
5. பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களின் ஆயுட்காலத்தை விட அதிகமாகும். இயற்கையாகவே ஆண்களும் பெண்களும் ஒரே விகிதாச்சாரப்படியே பிறக்கின்றனர்.

சிறுவயதில் இருந்தே பெண் பிள்ளைகளுக்கு ஆண் பிள்ளைகளை விட அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அதனாலேயே சிறு வயதில் ஆண் பிள்ளைகள் அதிகம் பேர் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். போர்க்காலங்களில் ஆண்களே பெண்களைவிட அதிகம் கொல்லப்படுகின்றனர். பல ஆண்கள் விபத்துகளிலும் நோய்களிலும் பெண்களைவிட அதிகமாக இறக்கின்றனர். பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாகும். எந்த ஒரு காலகட்டத்திலும் துணையை இழந்து வாழுபவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பர்.
 
இவ்வாறு இருப்பினும் பால் விகிதாச்சாரம் உலக அளவில் 1.01 ஆண்கள்/ பெண்கள் என்றே உள்ளது, மூலம் (2000 est.).

இதை பகுத்து பார்த்தால்

பிறப்பின் போது : 1.05 ஆண்கள்/ பெண்கள்

15 வயதுக்கு கீழ் : 1.05 ஆண்கள்/ பெண்கள்

15 முதல் 64 வயது வரை : 1.02 ஆண்கள்/பெண்கள்

65 வயதுக்கு மேல் : 0.78 ஆண்கள்/ பெண்கள்

எனவே பலதார மணம் என்பது இளம் ஆண்கள் வயதான பெண்களை திருமணம் செய்ய சம்மதித்தாலே சாத்தியமாகும்.
 
6. இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருக்கின்றனர்.

பெண்களைவிட ஆண்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் அதை சுற்றியுள்ள நாடுகளும் அடங்கும். இதற்கு காரணம் இந்தியாவில் அதிகம் காணப்படும் பெண் சிசுக்கொலை எனும் பழக்கமாகும். இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். இத்தீய பழக்கம் ஒழிக்கப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பார்கள்
 
சரி இப்போது புள்ளிவிவரத்திற்கு வருவோம்.

2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 1.07 ஆண்கள்/பெண்கள் என்ற விகிதாச்சாரம் உள்ளது.

கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை மிகவும் தீய பழக்கவழக்கமாகும், இந்திய சமுதாயம் அதற்காக கண்டிக்கப்பட வேண்டியது தான், அமெரிக்காவும் அதன் கருக்கலைப்பு பழக்கத்திற்காக கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் இந்தியாவில் உள்ள ஆண்/பெண் விகிதாச்சாரம் மற்ற இஸ்லாமிய நாடுகளை விட குறைவாகவே உள்ளது.

2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,

பஹ்ரைன் 1.03 ஆண்கள்/பெண்கள்

ட்ஜிபௌடி 1.07 ஆண்கள்/பெண்கள்

ஜோர்டான் 1.1 ஆண்கள்/பெண்கள்

குவைத் 1.5 ஆண்கள்/பெண்கள்

ஓமன் 1.31 ஆண்கள்/பெண்கள்

கத்தார் 1.93 ஆண்கள்/பெண்கள்

சவுதி அரேபியா 1.24 ஆண்கள்/பெண்கள்

ஐக்கிய எமிரேட் 1.51 ஆண்கள்/பெண்கள்

டாக்டர் நாயக் அவர்களே இஸ்லாமிய நாடுகளிலும் ஏன் இதே நிலை உள்ளது.
 
7. உலகத்திலேயே ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.
 
உலக பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவே. உலகத்தில் 3,059,307,647 ஆண்களும் 3,019,466,887 பெண்களும் உள்ளனர் (மூலம்). அதாவது உலகத்தில் பெண்களை விட 40 மில்லியன் ஆண்கள் அதிகமாக உள்ளனர்.
 
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்களை விட 7.8 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர்.
 
இல்லை, அமெரிக்காவில் 134,774,894 ஆண்களும் 140,787,779 பெண்களும் உள்ளனர், அஃதாவது 6 மில்லியன் பெண்கள் அதிகம். ஆனாலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் 5.9 மில்லியன் பெண்கள் 65 அதற்கு மேற்பட்ட வயது உள்ளவர்களாவார்கள். (மூலம்)
 
நியூ யார்க்கில் மட்டும் ஆண்களை விட 1 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர். நியூ யார்ர்கின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் ஓரினச்சேர்க்கை பழக்கம் (gays i.e sodomites) உள்ளவர்கள்.
 
நியூ யார்க் நகரத்தில் 3,437,687 ஆண்கள் மற்றும் 3,884,887 பெண்களும் உள்ளனர். அஃதாவது 447,000 பேர் பெண்கள் அதிகம் ( மூலம்). ஆனாலும் இதில் அதிக பட்சம் 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களே உள்ளனர். நியூ யார்க் நகரத்தில் மூன்றில் ஒரு பங்கினர் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்கள் என டாக்டர் நாயக் எப்படி முடிவு கட்டினார் என எனக்கு புரியவில்லை. 3,437,687 ஆண்கள் நியூயார்க்கில் உள்ளனர், இதில் 1,113,888 ஆண்களில் (32% ) திருமணமே ஆகாதவர்கள், மற்ற்வர்கள் திருமணமானோர்,விவாகரத்து பெற்றவர்கள், மனைவியை இழந்தோர். டாக்டர் நாயக்கின் கணக்கை அடைய வேண்டுமானால் நியூயார்க்கில் திருமணமாகாத ஆண்கள் அனைவருமே ஓரினச்சேர்க்கை பழக்கம் உடையவரே என்று சொல்லவேண்டும்d, இந்த கணக்கில் ஏனைய திருமணமானோர், விவாகரத்து பெற்றவர்கள், மனைவியை இழந்தோரும் அடங்குவர். டாக்டர் நாயக் இதை யோசித்து இருக்க மாட்டார், அதாவது பெண்களில் கூட ஓரினச்செர்க்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். நியூயார்க்கில் 1,080,026 திருமணமாகாத பெண்கள் உள்ளனர். இதில் சிலர் ஓரினச்சேர்க்கை பழக்கமுடியவர்களாகவும் இருக்கலாம்!
 
அமெரிக்காவில் மட்டும் 25 மில்லியன் ஆண்களுக்கும் மேல் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். இதன் பொருள் இந்த ஆண்கள் பெண்களை திருமணம் செய்துக்கொள்வதில்லை.
 
இந்த புள்ளி விவரத்திற்கு என்ன ஆதாரம்? ஓரினச்சேர்க்கை ஆண்களை பற்றி பேசும் டாக்டர் நாயக் ஓரினச்சேர்க்கை பெண்களை பற்றி கவனிக்க மறுக்கிறார்.
 
பிரிட்டனில் மட்டும் ஆண்களை விட 4 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
 
பிரிட்டனில் 29,303,077 ஆண்களும் 30,208,387 பெண்களும் உள்ளனர், அதாவது 1.6 மில்லியன் பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர், இவர்கள் 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள்.
 
ஜெர்மனியிலும் ஆண்களை விட 5 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
 
ஜெர்மனியில் 40,451,865 ஆண்களும் 42,345,543 பெண்களும் உள்ளனர். அஃதாவது 1,893,678 பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர். இருப்பினும் ஆண்களைவிட அதிகமாக உள்ள 3 மில்லியன் பெண்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்! (மூலம்).
 
ரஷ்யாவில் ஆண்களை விட 9 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர். உலகம் முழுவதிலும் எவ்வளவு பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர் என்பதை இறைவன் அறிவார்.
 
இதிலும் பெரும்பாலானோர் 65 வயதிற்கு மேற்பட்டவரே.
 
8. ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே ஒரு மனைவி என்ற சித்தாந்தம் நடைமுறையில் ஒத்துவராத ஒன்றாகும்.

ஒவ்வொரு மனிதனும் ஒரேயொரு மனைவியை திருமணம் செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட சூழ் நிலையில் அமெரிக்காவில் மட்டும் 30 மில்லியன் பெண்களுக்கு கணவர்கள் கிடைக்கமாட்டார்கள் (அமெரிக்காவில் 25 மில்லியன் ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய ஆண்கள் இருப்பதாக வைத்துக்கொண்டால்). அதேபோல் பிரிட்டனில் 4 மில்லியன் பெண்களுக்கும், ஜெர்மனியில் 5 மில்லியன் பெண்களும் ரஷ்யாவில் 9 மில்லியன் பெண்களுக்கும் கணவர்கள் கிடைக்கமாட்டார்கள்.
 
அமெரிக்காவில் 28,200,083 ஆண்களும் 23,434,118 பெண்களும் திருமணமே ஆகாதவர்களாக உள்ளனர்! (மூலம்). இந்த வேறுபாட்டைக்கொண்டு எப்படி பலதார மணத்தை அங்கீகரிக்க முடியும்? டாக்டர் நாயக் அவர்களின் இந்த ஓரினச் சேர்க்கை பற்றிய அவரது புள்ளிவிவரத்திற்கு ஆதாரத்தை கொடுக்கும் படி அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்களை குறித்து டாக்டர் நாயக் அவர்களின் புள்ளிவிபரம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் வெறும் 3 மில்லியன் பேரே ஓரினச்சேர்க்கை பழக்கம் இல்லாத வாலிபர்களாக இருப்பார்கள்.
 
ஒருவேளை உங்களுடைய அல்லது என்னுடைய தங்கை அமெரிக்காவில் வசிக்கிறார் என வைத்துக்கொள்வோம், அவருக்கு திருமணம் ஆகியிராத பட்சத்தில் அவர் ஏற்கனவே திருமணமான ஆணைத்தான் திருமணம் செய்யமுடியும் அல்லது பொதுவான உடமையாக (Public property) இருக்க வேண்டும். இஸ்லாமியர் அல்லாதோர் பலரிடம் இதை குறித்து கேட்டபோது நூற்றுக்கணக்கானோர் முதலாவது வழிமுறையே சிறந்தது என ஒத்துக்கொண்டனர். சில புத்திசாலிகள் மாத்திரம் தங்கள் தங்கையர் திருமணம் செய்யாமல் கன்னியாகவே வாழ அனுமதிப்போம் என்றனர்.
 
என்னது பொது உடைமையா??!! (Public property!??!), டாக்டர் நாயக் அவர்களின் தங்கையோ அல்லது வேறு எவரின் தங்கையோ யாருக்கும் பொது உடமையாக இருப்பார்கள் என எனக்கு நம்பிக்கையில்லை. வேதம் நமக்கு இப்படி கூறுகிறது.
 
"மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும்தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல மனைவியே அதற்கு அதிகாரி 1 கொரி 7:4
 
உயிரியல் பூர்வமாக எந்த ஒரு மனிதனோ மனுஷியோ வாழ் நாள் முழுவதும் துறவற வாழ்க்கையை மேற்கொள்ள முடியாது, ஒருவேளை சில விதிவிலக்குகள் அதுவும் பத்தாயிரத்தில் ஒன்று என இருக்கலாம். பெரும்பாலான மக்கள் திருமணம் செய்கின்றனர் அல்லது முறைகேடான பால் உறவு பழக்கங்களை கொண்டுள்ளனர். மனிதனுடைய உடலில் பால் உணர்வை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பிகள் வாயிலாக கலக்கின்றன. அதனால் தான் இஸ்லாமில் துறவற பழக்கமுறை தடைசெய்யப்பட்டுள்ளது.
 
மனிதனின் பால் உறவு வேட்கையை காரணம் காட்டி, பல தாரமணத்தையோ அல்லது தவறான பால் உறவின் தீய செயல்கள் செய்வதையோ நாம் நியாயப்படுத்த முடியாது. தேவன் நமக்கு பால் உறவு வேட்கையையும் கொடுத்திருக்கிறார் அதேபோல் இந்த பால் உறவு வேட்கையை தணித்துக்கொள்ள திருமணம் என்ற அருமையான எடுத்துக்காட்டை உருவாக்கியுள்ளார். எப்போதெல்லாம் நாம் தேவனுடைய இத்திட்டத்தை விட்டு வழிவிலகி பலதாரமணம் என்ற வகையிலோ அல்லது வேறு தவறான இச்சைகளை தீர்த்துக்கொள்ள முயற்சி செய்தாலோ நாம் அதன் பலனை அனுபவிக்கவேண்டும். இதைத்தான் வேதம் இவ்வாறு சொல்கிறது.
 
விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம். விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டு பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவன் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியை தள்ளிவிடக்கூடாது. (1 கொரி 7:8-11)
 
மேற்கத்திய சமுதாயத்தில் ஒரு மனிதன் திருமணத்திற்கு வெளியே ஒரு பெண்ணோடு உறவு வைத்துக்கொள்வதோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்துக்கொள்வதோ சகஜமான ஒன்று, இதனால் பெண் பாதுகாப்பில்லாத மற்றும் அவமானகரமான வாழ்க்கை வாழ நேரிடுகிறது. அதே மேற்கத்திய சமுதாயம் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ளவோ அல்லது ஒரு பாதுகாப்பான வாழ்க்கை வாழ அனுமதியளிப்பதில்லை. இதனால் கணவர் கிடைக்காத பெண் ஒன்று திருமணமான் ஆணை திருமணம் செய்யவேண்டும் அல்லது பொது உடமையாக வேண்டும். இஸ்லாம் மாத்திரமே முதலாவது வழிமுறையை ஆதரித்து இரண்டாவது வழிமுறையை எதிர்த்து தடை செய்கிறது. பலதார மணத்தை ஆதரிக்க பல காரணங்கள் இருப்பினும் பெண்களின் கற்பையும் ஒழுக்கத்தையும் பாதுக்காகவே என்பதை எடுத்துக்கொள்ளவேண்டும்.
 
ஆண்கள் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்வது சகஜமான ஒன்று என்பதை டாக்டர் நாயக் எப்படி, எந்த ஆதாரங்களின் அடிப்படையில் கூறுகிறார்? பெண்களும் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துள்ளார்கள் என்பதை டாக்டர் நாயக் புறந்தள்ளிவிடுகிறார். ஒரு மனிதன் தானாகவும் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளமுடியாது. பல மனைவிகள் வைத்துள்ள மனிதன் ஒருவன் முறைதவறிய உறவு வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதையும் டாக்டர் நாயக் மறந்துவிடுகிறார். மறுபடியும், பெண்கள் "பொது உடமைகள்" என்ற ஏற்றுக்கொள்ளமுடியாத விவரத்தை நாயக் சொல்லியுள்ளார்.

குர்ஆனிலும் பெண்கள் எவ்வாறு "மதிப்பாக வைக்கப்படுகின்றனர்" என்பதை கீழ்க்கண்ட வாசகத்தில் காணலாம்.
 
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!  (2:223)
 
Polyandry

கேள்வி: ஒரு மனிதன் ஒரு மனைவிக்கும் மேல் வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் போது ஏன் ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களை வைத்துக்கொள்ள முடியாது?

பதில்: முஸ்லீம்கள் உட்பட பலர் இக்கேள்வியை கேட்கின்றனர். முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அதாவது இஸ்லாமின் அஸ்திபாரம் நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது, அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சரிசமமாகவே படைத்துள்ளார், ஆனால் வெவ்வேறு தகுதிகளின் அடிப்படையிலேயே, ஆண்களும் பெண்களும் உடல் மற்றும் மனோரீதியாகவும் வெவ்வேறு வகையினர், அவர்களது கடமைகளும் வெவ்வேறானதே.
 
மேற்கண்ட குர்‍ஆன் வசனமானது, இக்கேள்விக்கான பதிலை தருகிறது: குர்‍ஆனின் படி பெண்கள் ஆண்களை திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர்.
 
ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்ய இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதை காண்போம்.

1. ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரை எளிதில் அடையாளம் காணப்படும். ஆனால் பல ஆண்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை தாயை வைத்தே அடையாளம் காணப்படுமேயன்றி தந்தையை வைத்து அல்ல. இஸ்லாம் பெற்றோர் இருவருக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. உளவியல் நிபுணரும் நமக்கு கூறுவது என்னவெனில் பெற்றோரை அறியாத குழந்தைகள் அதிலும் குறிப்பாக தகப்பனை அடையாளம் தெரியாத குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அவர்களது குழந்தைப்பருவம் சந்தோஷமாக இருக்காது. இதனாலேயே விலை மாதரின் பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பதில்லை. இப்படி திருமண உறவுக்கு வெளியே பிறக்கும் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை தகப்பன் என சொல்ல நேரிடும். சமீப காலங்களில் ஒரு குழந்தையின் தாய் தகப்பனை மரபணு சோதனையின் மூலம் கண்டுபிடிக்க இயலும். இந்த ஒரு வாதம் கடந்த காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
 
சரி அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்துள்ளவர் வீடுகளில் பிறக்கும் பிள்ளைகளுக்கு மன உளைச்சல் இல்லாமல் இருக்குமா? முக்கியமாக வாலிப பெண் பிள்ளைகளுக்கு?
 
2. இயற்கையாகவே பெண்ணைவிட ஆண் பலதார மண எண்ணம் உள்ளவராக இருக்கின்றனர்.
 
மனிதன் இயல்பாகவே பாவ சுபாவ உணர்ச்சிகள் உள்ளவன். ஆனால் அதற்காக நம் பாவமான சுபாவங்களை நியாயப்படுத்த‌ பலதார மனம் போன்ற பாவமான அமைப்பை நாம் உருவாக்க வேண்டுமா? தேவன் ஒரு பாவத்தை மற்றொரு பாவத்தை விட லேசானது என ஏற்றுக்கொள்வாரா?
 
3. உயிரியல் ரீதியாக பல மனைவிகளை உடையவன் தனது கடமைகளை தவறாமல் செய்யமுடியும், ஆனால் பல கணவரை உடைய பெண்ணுக்கு மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து தனது கடமைகளை செய்ய முடியாது.
 
டாக்டர் நாயக் இந்த விஷயத்தை மேலும் தெளிவு படுத்தியிருக்கலாம், உண்மையாகவே, இதில் எந்த தெளிவும் இல்லை.
 
4. ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்திருந்தால் பலரோடு பால் உறவு கொள்ள நேரிடும். அப்போது பால்வினை நோய்கள் அவர்கள் மூலமாக அவர்களது கணவர்களுக்கு பரவ நேரிடும். அவர்களது கணவர்கள் வேறு தொடர்புகள் வைத்திருக்குக்காதபோதே இந்த நிலை தான். ஆனால் ஒரு மனிதன் பல மனைவிகள் வைத்திருக்கும் போது நோய் பரவும் வாய்ப்புகள் குறைவே. இது போன்ற காரணங்கள் நாம் எளிதில் அறிந்து கொள்ளக்கூடியவையே. இது போன்ற பல காரணங்களுக்காகவே அல்லாஹ் தனது திவ்ய ஞானத்தால் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் வழக்கத்தை தடைசெய்திருக்கிறார்.
 
இவ்வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. ஒரு வேளை இவ்வித அமைப்பில் உள்ள மக்கள் வேறு எந்த தொடர்புகளும் இல்லாமல் இருந்தாலும் எங்ஙனம் பால் ரீதியான நோய்கள் பரவுகின்றன?

ஆக மொத்தத்தில் ஒரு தார மணம் என்ற வழக்கமே மனுக்குலத்திற்கு கடவுள் காட்டியுள்ள வழியாகும். இதிலிருந்து நாம் மாறுபட்டால் பாடுபடவேண்டியதுதான். மற்ற மத வழக்கங்களில் உள்ள பலதார மணத்தை சுட்டிக்காட்டி இஸ்லாமில் உள்ள பலதார வழக்கத்தை நாம் நியாயப்படுத்த முடியாது. விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, இச்சை போன்ற பாவங்களை மேற்கொள்ள ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற வாதம் தேவனுடைய பரிசுத்தத்தையும் ஞானத்தையும் கேள்விக்குரியதாக ஆக்கிவிடும்.


ஆங்கில மூலம்: Response to Zakir Naik - Polygamy

ஜாகிர் நாயக் அவர்களுக்கு அளித்த இதர பதில்கள்




 

 

Tuesday, January 13, 2009

டாக்ட‌ர் அஹ‌ம‌த் தீத‌த் அவ‌ர்க‌ளுக்கு பதில்: உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன?

டாக்ட‌ர் அஹ‌ம‌த் தீத‌த் அவ‌ர்க‌ளுக்கு / இஸ்லாமிய இணைய தளத்திற்கு பதில்:

 
முன்னுரை:


இஸ்லாமிய இணைய தளம் "கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை" என்ற பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது(http://www.tmpolitics.net/iip/Articles/ChristianityIsAMyth.htm).

இந்த கட்டுரையை இவர்கள் டாக்டர் அஹமத் தீதத் அவர்களின் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியிருந்தார்கள், ஆனால், அவரைப் பற்றி அந்த புத்தகத்தில் ஒரு வரியும் எழுதாலும், தாங்களே ஆராய்ச்சி செய்து எழுதியதைப் போல எழுதியிருந்தார்கள் [ கிறிஸ்தவர்களுக்கு பதில் எழுதும் போது எங்கள் தொடுப்பை கொடுப்பதில்லை, குறைந்தபட்சம் உங்கள் இஸ்லாமிய அறிஞரின் பெயரையாவது, புத்தகத்தின் பெயரையாவது கொடுக்கலாம் அல்லவா]

அஹமத் தீதத் அவர்கள் செய்த அதே தவறை இவர்களும் செய்துள்ளார்கள், அவரின் புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியது என்பதால், எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல் எழுதியுள்ளார்கள்.

இந்த கட்டுரையில், இவர்களின் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கப்படுகிறது. இது முதல் பாகம் தான், இன்னும் அனேக பாகங்கள் வெளிவரும், மற்றும் அஹமத் தீதத் அவர்கள் தான் என் ஆன்மீக தேடலுக்கு வித்தாக இருந்தார் என்றால் அது மிகையாகாது. இவரின் புத்தகங்களை படித்து பதிலை தேடும் வேட்டையை ஆரம்பித்து, பதில் கிடைத்தவுடன், இப்படிப்பட்டவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும் என்பதற்காக, ஈஸா குர்‍ஆன் தளம் ஆரம்பிக்கப்பட்டது.


 

பாகம் 1

உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன?

What Indeed Was the Sign of Jonah?

 
ஆசிரியர்: ஜான் கில்கிறைஸ்ட் (John Gilchrist)


 
இக்கட்டுரையின் உப‌தலைப்புக்கள்
 
யோனாவின் அடையாளம்

• கல்லரையில் இயேசு உயிரோடு இருந்தாரா அல்லது மரித்து இருந்தாரா?

• "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்றால் என்ன?

• நினிவே மக்களுக்கு யோனா ஒரு அடையாளம் ஆவார்?

• யோனாவின் அடையாளமே அன்றி வேறு அடையாளமில்லை

• "இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளுக்குள்ளே இதை"

• யோனாவின் அடையாளத்தின் முக்கியத்துவம்

• இயேசுவின் உயிர்த்தெழுதல்

• யார் கல்லை புரட்டியது?

 

THE SIGN OF JONAH

யோனாவின் அடையாளம்

 
பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி, இஸ்ரவேல் நாட்டில் இயேசு தன் குறுகிய கால அந்த மூன்று வருட ஊழியத்தின் போது அனேக பலமுள்ள அற்புதங்கள் செய்தார். அந்த அற்புதங்கள் அடையாளங்களைக் கண்டு பல யூதர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தார்கள். இயேசுவின் அற்புதங்கள் எல்லாருக்கும் தெரியும் வண்ணம் வெளிப்படையாக இருந்தாலும், யூத தலைவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க மறுத்துவிட்டனர், மற்றும் அவரிடம் அடையாளம் காட்டும் படி, அல்லது வானத்திலிருந்து ஒரு அடையாளத்தை காட்டும் படி கேட்டனர்(மத்தேயு 16:1). ஒரு முறை அவர்களுக்கு "ஒரே ஒரு அடையாளம் தருவேன்" என்று இயேசு பதில் அளித்தார்:
 
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். (மத்தேயு 12:39-40)
 
யோனா என்பவர் இஸ்ரவேலின் ஒரு பெரிய தீர்க்கதரிசியாவார். அசீரியாவின் நினிவே என்ற பட்டணத்தின் அழிவு நாளைப்பற்றி அந்நாட்டு மக்களுக்கு தீர்க்கதரிசனமாக சொல்லவேண்டுமென்று தேவனால் அவர் அழைக்கப்பட்டார். ஆனால், நினிவே பட்டணத்திற்குப் போகாமல் தர்ஷீஷ் என்ற பட்டணத்திற்கு அவர் போக நினைத்தபோது, அவர் செல்லும் கப்பலை மிகப்பெரிய புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு தாக்கியபோது, அந்த கப்பலில் பிரயாணம் செய்த மக்களால் அவர் கடலில் தூக்கி எறியப்பட்டார் ம அப்போது அவரை ஒரு பெரிய மீன் விழுங்கிவிட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்த மீனின் வயிற்றிலிருந்து உயிரோடு தூக்கி எறியப்பட்டு அந்த நினிவே பட்டணத்திற்குள் சென்றார்.

அந்த மீனின் வயிற்றில் யோனா இருந்த மூன்று நாட்களைப் பற்றி "யோனாவின் அடையாளம்" என்று இயேசு குறிப்பிட்டார். மற்றும் இந்த ஒரே ஒரு அடையாளம் மட்டுமே, தன் மீது நம்பிக்கை வைக்காத யூதர்களுக்கு தான் கொடுக்கும் அடையாளம் என்று இயேசு கூறினார். தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற நகரத்தில் உள்ள "இஸ்லாமிய பிரச்சார மையம் (Islamic Propagation Centre)" என்ற இயக்கத்தைச் சார்ந்த அஹமத் தீதத்(Ahmed Deedat) என்பவர், 1976ம் வருடத்தில் "யோனாவின் அடையாளம் என்ன?(What was the Sign of Jonah?)" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்த தலைப்பை பார்த்தவுடன், அந்த தலைப்பைப் பற்றி மிகவும் அதிகமாக ஆராய்ச்சி செய்து அவ‌ர் எழுதியிருக்கக்கூடும் என்று வாசகர்கள் எண்ணக்கூடும். ஆனால், உண்மையில், தீதத் அவர்கள் தான் கேட்ட கேள்விக்கு தானே பதில் சொல்லாமல், இயேசு சொன்ன வார்த்தைகளைத் தாக்கி, இயேசு கூறியதை மறுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அவரது வாதங்கள் அனைத்தும் அவரது இரண்டு யூகங்களுக்குள் அடங்கிவிடும். முதலாவதாக, யோனா மீனின் வயிற்றில் அந்த மூன்று நாட்கள் உயிரோடு இருந்திருந்தால், சிலுவையிலிருந்து இயேசுவை இறக்கி அவரை கல்லரையில் வைத்த பிற்பாடு இயேசு உயிரோடு இருந்திருக்க வேண்டும். இரண்டாவதாக, இயேசு வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு, அதைத் தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் உயிரோடு எழுந்திருந்தால், கல்லரையில் இருந்த அந்த இடைப்பட்ட காலமானது மூன்று நாட்கள் இரவும் பகலுமாக இருக்காது என்பது தான். அஹமத் தீதத் அவர்களின் இந்த இரண்டு யூகங்களை ஆராய்ந்து, இந்த தலைப்பைப் பற்றி அலசி, யோனாவின் அடையாளம் என்றால் உண்மையில் என்ன? என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

 

1. WAS JESUS ALIVE OR DEAD IN THE TOMB?


1. கல்லரையில் இயேசு உயிரோடு இருந்தாரா அல்லது மரித்து இருந்தாரா?

 
பைபிளில் உள்ள யோனா புத்தகத்தின் கிறிஸ்த‌வ‌ விள‌க்க‌வுரைக‌ளின் ப‌டி, யோனா மீனின் வ‌யிற்றிலிருந்த‌ அந்த மூன்று நாட்கள் அற்புத‌வித‌மாக‌ உயிரோடு பாதுகாக்க‌ப்ப‌ட்டு இருந்தார் என்ப‌தை நாம் அறிகிறோம். அவ‌ர் மீனின் வ‌யிற்றில் இருக்கும் போது ஒரு நாழிகையும் ம‌ரிக்காம‌ல் இருந்தார், மற்றும் அந்த மீன் அவரை உயிரோடு கரையில் போட்டது.

அஹமத் தீதத் தன் புத்தகத்தில், மேலே சொன்ன விவரங்களை எடுத்து, புதிய ஒரு வியாக்கீனத்தைத் தருகிறார், அதாவது "யோனா எப்படியோ... அதே போல மனுஷகுமாரனும் (As Jonah was ... so shall the Son of man be)" என்று கூறுகிறார்.
 
If Jonah was alive for three days and three nights, then Jesus also ought to have been alive in the tomb as he himself had foretold!

யோனா மூன்று நாட்கள் இரவும் பகலும் உயிரோடு இருந்திருந்தால், இயேசு சொன்னது போல, தான் அப்படியே கல்லரையில் இருந்த நாட்களில் உயிரோடு இருந்திருக்கவேண்டும், (Deedat, What was the Sign of Jonah?, p.6).
 
இயேசு தனக்கும் யோனாவிற்கும் இருக்கும் ஒற்றுமை என்பது அவர் மூன்று நாட்கள் எப்படி அந்த மீனின் வயிற்றில் இருந்தாரோ, அது போல, தானும் கல்லரையில் இருப்பார் என்பதைப் பற்றியதே அல்லாமல் வேறுவகையில் இல்லை. ஆனால், இந்த முக்கியமான விவரத்தை தீதத் அவர்கள் எடுத்துவிட்டு, மற்ற விதங்களில் கூட யோனாவும் இயேசுவும் ஒன்று தான் என்றுச் சொல்கிறார், எப்படியென்றால், அந்த மூன்று நாட்கள் எப்படி யோனா உயிரோடு இருந்தாரோ அதே போல, இயேசுவும் என்று தன் சொந்த கற்பனையைச் சொல்லியுள்ளார். இயேசு சொன்ன வார்த்தைகளை முழுவதுமாக நாம் படிப்போமானால், தனக்கும் யோனாவிற்கும் சொல்லப்பட்ட ஒற்றுமையானது, அந்த மூன்று நாட்களைப் பற்றி குறிக்குமே அன்றி, வேறு வகையில் குறிக்காது என்பதை புரிந்துக்கொள்ளலாம். எப்படி யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தாரோ அது போல, இயேசுவும் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பார் என்பது தான் சரியான அர்த்தமாகும். ஆனால், இதனை தீதத் அவர்கள் சொல்வது போல, வியாக்கீனம் செய்யமுடியாது, அதாவது யோனா எப்படி உயிரோடு இருந்தாரோ அதே போல இயேசுவும் உயிரோடு இருந்திருக்கவேண்டும் என்று வியாக்கீனம் செய்யமுடியாது(One cannot stretch this further, as Deedat does, to say that as Jonah was ALIVE in the fish, so Jesus would be alive in the tomb). அஹமத் தீதத் அவர்கள் சொல்வது போல, இயேசு சொல்லவில்லை, மற்றும் இயேசு சொன்ன வார்த்தைகளுக்கு அப்படி பொருளும் இல்லை. இன்னும் இதைப் பற்றி மிகவும் தெளிவாக இயேசு வேறு ஒரு இடத்திலும் கூறியுள்ளார். அதாவது, தன்னை சிலுவையில் அறைவார்கள் என்பதை விளக்க ஒரு முறை இயேசு கீழ் கண்டவாறு சொல்லியுள்ளார்.
 
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்.

"As Moses lifted up the serpent in the wilderness, so must the Son of man be lifted up". (யோவான் 3:14-15)
 
மேலேயுள்ள வசனத்தில் குறிப்பிட்ட ஒற்றுமையானது "உயர்த்தப்பட்டது - LIFTED UP" என்பதை பற்றி என்பது தெளிவாக விளங்கும். மோசே எப்படி சர்ப்பத்தை உயர்த்தினாரோ அதுபோல, இயேசுவும் உயர்த்தப்படவேண்டும். சர்ப்பம் மோசேயினால் உயர்த்தப்பட்டது, யூதர்கள் ஆரோக்கியம் அடைவதற்காக, இயேசு உயர்த்தப்படவேண்டியது உலக நாடுகளின் ஆரோக்கியம், மற்றும் இரட்சிப்பிற்காக. இந்த நிகழ்ச்சியில், மோசே உருவாக்கிய வெண்கல சர்ப்பமானது உயிரோடு இருந்ததில்லை, மற்றும் தீதத் அவர்களின் லாஜிக்கை (Logic- வாதத்தை) இயேசு சொன்ன எடுத்துகாட்டோடு சம்மந்தப்படுத்தினால், அந்த வெண்கல சர்ப்பம் போல, இயேசு உயர்த்தப்படுவதற்கு முன்பு மரித்து இருக்கவேண்டும், சிலுவையிலும் அவரது மரித்த உடல் மட்டுமே இருந்திருக்க வேண்டும், மற்றும் சிலுவையிலிருந்து இறக்கும் போதும் அவர் மரித்தவராகவே இருந்திருக்க வேண்டும். அஹமத் தீதத் அவர்களின் இந்த வாதம் வாதத்திற்கு பொருத்தமானது அல்ல. அதோடு மட்டுமல்லாமல், யோனா உயிரோடு இருந்த நிலையும், இந்த சர்ப்பத்தின் உயிரில்லாத நிலையும் முரண்பட்டதாக உள்ளது (அதாவது, யோனா மீனின் வயிற்றில் இருந்த காலகட்டத்தில் முழுவதும் உயிரோடு இருந்தார், அந்த சர்ப்பம் ஆரம்பத்திலிருந்தே உயிரில்லாத பொருளாக இருந்து உயர்த்தப்பட்ட கால கட்டத்திலும் உயிரில்லாமல் இருந்தது என்பது ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் இருக்கின்றன).

இவைகள் நமக்கு எதை காட்டுகின்றன? இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் மோசே உருவாக்கிய சர்ப்பத்திற்கும் உள்ள ஒப்பிடுதலில், "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்ற விவரம் யோனாவோடும், "தூணில் உயர்த்தப்படுதல்" என்பதை அந்த வெண்கல சர்ப்பத்தோடும் ஒப்பிட்டார் என்பதை நாம் அறியலாம். இயேசுவின் ஒப்பிடுதலில் யோனா உயிரோடு இருந்தாரா இல்லையா என்பது முக்கியமில்லை. இயேசுவின் ஒப்பிடுதலுக்கும் யோனா உயிரோடு இருந்தார் என்பதற்கும் சம்மந்தமே இல்லை (It does not matter whether Jonah was alive or not - this has nothing to do with the comparison Jesus was making).

யோனாவைக் குறித்து சொல்லப்பட்ட இடத்தில் மிகவும் முக்கியமாக உள்ள நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தை நீக்கிவிட்டு, தீதத் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளைப் பற்றி "யோனா எப்படியோ... அது போல மனுஷ குமாரனும்" என்று கூறுகிறார். அதாவது யோனா மீனின் வயிற்றில் எந்த நிலையில் (உயிரோடு) இருந்தார் என்பதை இயேசுவோடு ஒப்பிட்டது, தீதத் அவர்களின் சொந்தமான ஒப்பிடுதல் ஆகும். ஆனால், தீதத் அவர்கள் வழிமுறையைப் பின்பற்றி நாம் மேற்கோள் காட்டிய மற்ற வசனங்களை ஆராய்ந்தால், தீதத் அவர்கள் சொன்னதற்கு முரண்பட்ட விவாரம் தான் கிடைக்கிறது. சர்ப்பம் பற்றிய வசனத்தை கவனித்தால், நாம் இவ்விதமாக சொல்லவேண்டி வரும் "சர்ப்பம் எப்படியோ ... அதே போல மனுஷகுமாரனும் (As the serpent ... so shall the Son of man be)". இந்த விவரங்களில் சர்ப்பமானது மரித்த ஒன்றாக அல்லது உயிரில்லாத ஒன்றாக உயர்த்தப்பட்ட காலகட்டம் அனைத்திலும் இருந்தது. இதன் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இயேசு தனக்கும் யோனாவிற்கும், தனக்கும் சர்ப்பத்திற்கும் ஒப்பிட்டது, யோனாவோ, சர்ப்பமோ உயிரோடு இருந்ததா மரித்து இருந்ததா என்பதை ஒப்பிட்டு கூறவில்லை.

ஆக, தீதத் அவர்களின் முதலாவது மறுப்பு தோல்வி அடைந்து மண்ணை கவ்வியது என்பதை நாம் காணலாம். தீதத் அவர்கள் செய்யும் வாதங்களின் தன்மையில் எப்போதும் முரண்பட்ட விவரங்களே கிடைக்கும். ஒரு மறுப்பு அல்லது வாதம் தன்னைத் தானே முரண்பட்டால், அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது (So we see that Deedat's first objection falls entirely to the ground. A contradictory conclusion automatically results from his line of reasoning and no objection or argument which negates itself can ever be considered with any degree of seriousness).

 

2. THREE DAYS AND THREE NIGHTS


2. மூன்று நாட்கள் இரவும் பகலும் என்றால் என்ன?

 
இயேசு வெள்ளிக்கிழமை அன்று சிலுவையில் அறையப்பட்டார் என்றும் அதை தொடர்ந்து வந்த ஞாயிறு அன்று உயிர்த்தெழுந்தார் என்றும் ஒரு சிலரை தவிர உலகமுழுவதும் உள்ள கிறிஸ்தவ சமுதாயம் அங்கீகரிக்கிறது. இயேசு கல்லரையில் ஒரு நாள் மட்டும் தான் முழுவதுமாக‌ இருந்தார், அதாவது அந்த சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் இருந்தார் என்று தீதத் அவர்கள் வாதம் புரிகின்றார் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை இரவு என்று இரண்டு இரவுகள் மட்டும் தான் அவர் கல்லரையில் இருந்தார் என்றுச் சொல்கிறார். இப்படி சொல்வதின் மூலம், யோனாவின் அடையாளம் பற்றி இயேசு சொன்ன கால விவரத்தை மறுக்க முயன்றுள்ளார் தீதத் அவர்கள். தீதத் கூறுகிறார்:
 
Secondly, we also discover that he failed to fulfil the time factor as well. The greatest mathematician in Christendom will fail to obtain the desired result - three days and three nights.

"இரண்டாவதாக, இயேசு நேரம் சம்மந்தப்பட்ட விவரத்தையும் நிறைவேற்ற தவறிவிட்டார். கிறிஸ்தவ உலகின் சிறந்த கணித மேதாவி மூன்று நாட்கள் இரவும் பகலும் என்பதை கணக்கிட தவறிவிட்டார்." (Deedat, What was the Sign of Jonah?, p.10).
 
துரதிஷ்டவசமாக, தீதத் அவர்கள், முதல் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்த எபிரேய பேச்சு வழக்கத்திற்கும், இந்த இருபதாம் நூற்றாண்டு ஆங்கில பேச்சுவழக்கத்திற்கும் இடையே உள்ள ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை காண தவறிவிட்டார். தீதத் அவர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட விவரங்கள் பற்றி விவாதிக்கும் போதெல்லாம், இந்த தவறை அடிக்கடி செய்கிறார் என்பதை நாம் கண்கூடாக காணமுடியும். அதாவது, அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, யூதர்கள் ஒரு நாளில் எந்த பகுதியையும் கணக்கிடும் போது, அதை ஒரு முழு நாளாகவே கணக்கிட்டனர், இந்த உண்மையை தீதத் அவர்கள் கண்டுபிடிக்க தவறிவிட்டார்கள். இயேசு கல்லரையில் வெள்ளிக்கிழமை அன்று மதியத்திற்கு பிற்பாடு வைக்கப்பட்டார், மற்றும் சனிக்கிழமை முழுவதும் கல்லரையில் இருந்தார், மறு நாள் அதாவது ஞாயிறு அன்று காலை உயிரோடு எழுந்தார். அதிகார பூர்வமான யூதர்களின் காலண்டரின் (நாட்காட்டி) படி, ஞாயிற்றுக்கிழமை என்பது சனிக்கிழமை மாலை பொழுது சாய்வதிலிருந்து ஆரம்பிக்கிறது. இதன் படி, இயேசு மூன்று நாட்கள் கல்லரையில் இருந்தார்.

யூதர்கள் எப்படி இரவு பகல் மற்றும் நாட்களை கணக்கிடுகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளாமல், யூதர்கள் பேச்சு மற்றும் எழுதும் வழக்கம் என்ன என்பதை அறிந்துக் கொள்ளாமல் அஹமத் தீதத் அவர்கள் மிகப்பெரிய தவறை(serious mistake) செய்துள்ளார்கள். அதே போல, இயேசு, தான் மூன்று நாட்கள் இரவும் பகலும் கல்லரையில் இருப்பேன் என்றுச் சொன்ன தீர்க்கதரிசனைத்தைப் பற்றி தீதத் அவர்கள் புரிந்துக்கொள்ளாமல் மறுபடியும் அதே தவறை செய்துள்ளார்கள். நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில், யூதர்கள் சொல்வது போல, "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்று ஆங்கிலத்தில் அதே வழக்கத்தின் படி, அதே பொருள் படும் படி சொல்வதில்லை நாம் அந்த வார்த்தைகளின் பொருளை, அந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட முதல் நூற்றாண்டில் இருந்த எபிரேய மொழி எழுத்து மற்றும் பேச்சு வழக்கப்படி பொருள் கூறாமல், அன்று இருந்த வழக்கப்படி சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு இன்று நாம் பேசும் மொழியின் இலக்கணத்தின் படி, வேறு ஒரு மொழியின் அமைப்புப் படி பொருள் கூற முயலுவது தவறாகவே முடியும் (The expression three days and three nights is the sort of expression that we never, speaking English in the twentieth century, use today. We must obviously therefore seek its meaning according to its use as a Hebrew colloquialism in the first century and are very likely to err if we judge or interpret it according to the language structure or figures of speech in a very different language in a much later age).

நாம் இந்த இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் பேசும் போது, "இத்தனை நாட்கள் இரவும் பகலும்" என்ற வழக்கப்படி நாம் பேசுவதில்லை. உதாரணத்திற்கு, ஒரு நபர் இரண்டு வாரங்களுக்கு ஒரு ஊருக்கு செல்வதாக இருந்தால், நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் போது "ஃபோர்ட்நைட்(Fortnight) அல்லது இருவாரங்கள் அல்லது 14 நாட்கள்" என்றுச் சொல்வார். நான் இதுவரையில் ஆங்கிலத்தில் இவ்விதமாக சொல்பவரை, அதாவது "நான் பதினான்கு நாட்கள் இரவும் பதினான்கு நாட்கள் பகலும் ஊருக்குச் செல்கிறேன்" என்று சொல்பவரை நான் கண்டதே இல்லை(I have never yet met anyone speaking the English language say he will be away fourteen days and fourteen nights). அக்காலத்தில் இப்படி இரவு பகல் என்றுச் சொல்வது எபிரேய மொழியில் இருந்த ஒரு பேச்சு வழக்கமாகும் (Figure of Speech in the Hebrew). இப்படிப்பட்ட பேச்சு வழக்க வார்த்தைகளைப் பற்றி ஆராயும் போது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட உவமானத்திற்கு(figures of speech), அதை சொன்னவர் என்ன‌ பொருளில் கூறினார் என்பதை தெரிந்துக் கொள்ளாமல், இன்று நாம் அதற்கு சரியான பொருளை கூறமுடியாது. இயேசு சொன்ன அந்த தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு அந்த காலகட்டத்தில், அந்த காலச்சூழலில்(Context) என்ன பொருள் இருந்தது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மேலும், எபிரேய மொழியில் சொல்லப்பட்ட அந்த பேச்சு/எழுத்து வழக்கில் உள்ள ஒரு ஒற்றுமையை நாம் கவனித்தோமானால், இரவும் பகலும் என்றுச் சொல்லும் போது, இரண்டின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கும். அதாவது எத்தனை இரவுகளோ அத்தனை பகல்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்(Furthermore we must also note that the figure of speech, as used in Hebrew, always had the same number of days and nights).
 
மோசே நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசம் இருந்தார்(யாத் 24:18)

Moses fasted forty days and forty nights (Exodus 24.18).

யோனா மூன்று நாட்கள் இரவும் பகலும் மீனின் வயிற்றில் இருந்தார்(யோனா 1:17)

Jonah was in the whale three days and three nights (Jonah 1.17)

யோபுவின் நண்பர்கள் அவரோடு ஏழு நாட்கள் இரவும் பகலும் உட்கார்ந்து இருந்தார்கள் (யோபு 2:13)

Job's friends sat with him seven days and seven nights (Job 2.13).


எந்த ஒரு யூதனானாலும் சரி,

"ஏழு பகல் மற்றும் ஆறு இரவுகள் - seven days and six nights" என்றோ அல்லது

"மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகள் - three days and two nights " என்றோ கூறமாட்டார்,

 
உண்மையிலேயே அவர் இந்த குறிப்பிட்ட காலத்தை குறிப்பிட நினைத்தாலும் கூட‌ இப்படி கூறமாட்டார். எபிரேய மொழியின் பேச்சு/எழுத்து வழக்கத்தின் படி(colloquialism) எப்போதும் இரவும் பகலும் ஒரே எண்ணிக்கையை உடையதாக இருக்கும். ஒரு யூதன் மூன்று பகல் மற்றும் இரண்டு இரவுகள் பற்றிக் கூறுவதாக இருந்தாலும், "மூன்று பகல் இரவுகள்" என்று தான் கூறுவார்.

இந்த விவரம் பற்றி மிகவும் தெளிவான உதாரணத்தை அல்லது விளக்கத்தை எஸ்தர் புத்தகத்தில் காணலாம். அதாவது "யாரும் மூன்று நாட்கள் இரவும் பகலும்" ஒன்றுமே புசிக்கவேண்டாம், உபவாசம் இருங்கள் என்று எஸ்தர் இராணி சொல்கிறார் (எஸ்தர் 4:16). ஆனால், மூன்றாம் நாளிலேயே, அதாவது இரண்டு இரவுகள் மட்டும் கழித்து, இராணி உபவாசத்தையும் முடித்துக்கொண்டு இராஜாவின் இருப்பிடத்திற்குச் செல்கிறாள்.

ஆக, யூதர்களின் வழக்கப்படி "மூன்று நாட்கள் இரவு பகல்" என்பது கண்டிப்பாக மூன்று முழு பகல்கள் மற்றும் முன்று முழு இரவுகள் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை, இதற்கு பதிலாக முதல் நாளின் ஒரு பகுதியை ஒரு முழு நாளாகவும், மற்றும் மூன்றாம் நாளின் ஒரு பகுதியை ஒரு நாளாகவும் கணக்கிடுவார்கள்(So we see quite plainly that "three days and three nights", in Jewish terminology, did not necessarily imply a full period of three actual days and three actual nights but was simply a colloquialism used to cover any part of the first and third days).

இதில் நாம் கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், எப்போதும் சரி, இரவுகள் மற்றும் பகல்கள் பற்றிய எண்ணிக்கையைப் கூறும் போது இரண்டிற்கும் ஒரே எண்ணை குறிப்பிடுவார்கள், உண்மையில் பகல்களை விட இரவுகள் ஒன்று குறைவாக இருந்தாலும் சரி. இப்படிப்பட்ட பேச்சு வழக்கத்தின் படி இன்று நாம் பேசுவதில்லை. மட்டுமல்ல, நம்முடைய தற்கால பேச்சு வழக்கத்தின் பொருள் தான் அக்காலத்தின் பேச்சுக்களுக்கு வரும் என்றுச் சொல்லி திணித்து கட்டாயப்படுத்த முடியாது.

இந்த விவரம் பற்றிய மிகவும் தெளிவான ஆதாரம் ஒன்று பைபிளில் உள்ளது. இயேசு யூதர்களுக்குச் சொல்லியிருந்தார், அதாவது மூன்று நாட்கள் இரவும் பகலும் நான் பூமியின் இதயத்தில்(கல்லரையில்) இருப்பேன் என்று. ஆகையால், இயேசு சொன்ன இந்த விவரம் ஒரு வேளை தீர்க்கதரிசனமாக இரண்டு இரவுகள் முடிந்தவுடன் நிறைவேறி விடும் என்று எண்ணி, யூதர்கள் செயல்பட ஆரம்பித்தார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட மறுநாளில் அதாவது ஒரே இரவு மட்டுமே ஆன பிறகு (சனிக்கிழமை), யூதர்கள் பிலாத்துவிடம் சென்று கீழ்கண்டவிதம் கூறினார்கள்:
 
Sir, we remember how that impostor said, while he was still alive, 'After three days I will rise again'. Therefore order the sepulchre to be made secure until the third day.

ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாளைக்குப் பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும என்றார்கள் (மத்தேயு 27:63-64).
 
"மூன்று நாளைக்குப் பின்" என்ற‌ சொற்றொடரானது "நான்காவ‌து நாளைக்" குறிக்கின்ற‌து என்று நாம் புரிந்துக் கொள்கிறோம். ஆனால், யூதர்களின் பேச்சு வழக்கின் படி(colloquialism), இது மூன்றாம் நாளைக் குறிக்கும் என்று யூதர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே தான் யூத‌ர்க‌ள் மூன்று முழூ ப‌கல்கள் ம‌ற்றும் மூன்று முழூ இர‌வுக‌ள் க‌ல்லரையை பாதுகாக்க ஜாக்கிரதைப்படவில்லை, அதற்கு பதிலாக இரண்டாம் இரவு ஆனவுடன் மூன்றாம் நாள் வரை மட்டுமே காவல் காக்க பிரயாசப்பட்டனர். ஆக, யூதர்களின் பேச்சுவழக்கத்தின் படி "மூன்று நாட்கள் இரவு பகல்" என்றுச் சொன்னால், மற்றும் "மூன்று நாளுக்குப்பின்" என்றுச் சொன்னால், நாம் நம் வழக்கத்தின் படி கருதுவது போல் அது மூன்று முழூ நாட்களின் மொத்த நேரத்தைக் குறிக்காமல், அதாவது 72 மணி நேரத்திற்கு பிறகு என்றுக் குறிக்காமல், அந்த மூன்றாவது நாளில் எந்த ஒரு பகுதியையும் குறிக்கும்(Clearly, therefore, the expressions "three days and three nights" and "after three days" did not mean a full period of seventy-two hours as we would understand them, but any period of time covering a period of up to three days.)

இந்நாட்களில் நம்மிடம் ஒருவர் வெள்ளிக்கிழமை மதிய சமயத்தில் வந்து "நான் உங்களை மூன்று நாட்களுக்கு பிறகு வந்து சந்திக்கிறேன்" என்றுச் சொல்வாரானால், அவர் நம்மை அடுத்து வரும் செவ்வாய்க் கிழமைக்கு முன்பு வந்து சந்திப்பார் என்று நாம் எதிர்பார்க்கமாட்டோம். அவர் செவ்வாய்க் கிழமைக்கு பிறகு தான் நம்மை சந்திக்கவருவார் என்று நான் எதிர்ப்பார்ப்போம். ஆனால், யூதர்கள் இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறி விடக்கூடாது என்பதற்காக மிகவும் கவலைப்பட்டு, கல்லரையை மூன்றாம் நாள் வரை மட்டும் பாதுகாத்தால் மட்டும் போதும் என்பதால், அரசரிடம் சென்று ஞாயிறு வரைக்கும் காவல் வைக்கும் படி கேட்டுக்கொண்டனர். ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும், அதாவது "மூன்று நாட்கள் இரவும் பகலும்" என்றாலோ அல்லது "மூன்று நாளுக்கு பின்பு" என்றுச் சொன்னாலோ, தங்கள் வழக்கத்தின் படி அந்நாட்களில் அது மூன்றாம் நாளை குறிக்குமே அல்லாமல், மூன்று முழு நாட்களுக்கு பின்பு நான்காம் நாளை குறிக்காது.

ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், நம்முடைய பேச்சு வழக்கில் இல்லாத ஒரு சொற்றொடரை படிக்கும் போது எப்படி அதன் பொருளை சரியாக புரிந்துக் கொள்வது? இதற்கு பதில் "யூதர்கள் எப்படி அக்காலத்தில் அவர்களின் பேச்சுவழக்கத்தின் படி படித்தார்கள்" என்பதை புரிந்துக்கொண்டால் தான் நமக்கு அச்சொற்றொடரின் அர்த்தம் சரியாகப் புரியும். இயேசுவின் சீடர்கள் மிகவும் தைரியமாக, "இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்" என்றுச் சொன்னபோது, அதாவது ஞாயிறு அன்று வரை இரண்டு இரவுகள் மட்டுமே கடந்திருந்தாலும், சீடர்கள் இப்படி தைரியமாகச் சொன்னபோது(அப் 10:40), எந்த ஒரு யூதனும் சீடர்களிடம் வந்து தீதத் அவர்கள் இப்போது சொல்வது போல, மூன்று இரவுகள் கடக்காமல் இரண்டு இரவுகள் தானே ஆனது அப்படியானால் எப்படி இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது என்று கேள்வி கேட்கவில்லை. இந்த பிரச்சனை அக்கால யூதர்களுக்கு இருந்ததில்லை, ஏனென்றால், அவர்களின் பேச்சு வழக்கம் அவர்களுக்கு மிகவும் நன்றாகவே புரிந்து இருந்தது. ஆனால், தீதத் அவர்களுக்கு யூதர்களின் பேச்சு வழக்கம் தெரியாத காரணத்தால் தான், இயேசுவின் தீர்க்கதரிசனத்தை தாக்கி எழுதுகிறார், அதாவது, இயேசு மூன்று முழு பகல்கள், மூன்று முழு இரவுகள், கல்லரையில் இல்லை, அவர் 72 மணி நேரம் கல்லரையில் இல்லை, ஆகையால் தீர்க்கதரிசனம் நிறைவேறவில்லை என்று அறியாமையினால் இப்படிச் சொல்கிறார். (ஆக, யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இரவும் பகலும் இருந்ததும், 72 மணி நேரம் கொண்ட மூன்று முழு இரவும் பகலும் அல்ல, மூன்றாவது நாளிலேயே அவர் மீனின் வயிற்றிலிருந்து வெளிப்பட்டிருப்பார்).

இதுவரை நாம் கண்ட விவரங்களைக் கொண்டு, இயேசு யூதர்களுக்கு காட்டுவேன் என்றுச் சொன்ன அடையாளத்திற்கு எதிராக அஹமத் தீதத் அவர்களின் பலவீன வாதத்தில் உள்ள குறைபாடை நாம் வெளிக் கொணர்ந்துள்ளோம். அடுத்ததாக, யோனாவின் அடையாளம் என்றால் என்ன என்பதை இன்னும் தெளிவாக நாம் ஆராய்வோம்.


Source: http://www.answering-islam.org/Gilchrist/jonah.html

 

 

Back - John Gilchrist Articles